முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Kurtalam-Falls 2022 12 04

Source: provided

தென்காசி ; தண்ணீர் வரத்து சீரானதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் நேற்று முன்தினம் முழுவதும் இந்த 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

நேற்று காலை முதல் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அலைமோதியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து