எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.- 25 - டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் போராடி தோற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 26-வது ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. அதிக தோல்விகளால் துவண்டுபோன டெல்லி அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அணி மீண்டெழ இந்த போட்டியில் வெல்வது மிக முக்கியம் என கருதப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சேவாக் தலைமையிலான டெல்லி அணியினர் பெரோஷா கோட்லா மைதானத்தில் களமிறங்கினர். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அதிரடி விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தலைமையிலான வலுவான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது. டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் டெல்லி அணி பேட்செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் சேவாக் தங்கள் அதிரடி ஆட்டத்தை துவக்கினர். இந்த ஜோடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக சேவாக் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் முதல் 5 ஓவர்களிலேயே டெல்லி 50 ரன்களை எட்டியது. இதையடுத்து வார்னர் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். டெல்லி அணியின் முதல் 100 ரன்கள் 8.4 ஓவர்களிலேயே கிடைத்தது. சேவாக் 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பவுலர்கள் திணறினர். இந்நிலையில் டெல்லி அணியின் ஸ்கோர் 11.4 ஓவர்களில் 146 ஆக இருந்தபோது ஹுஸ்ஸேவின் பந்தில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கால் கேட்ச் செய்யப்பட்ட சேவாக் ஆட்டமிழந்தார். இவர் 35 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த நாகர் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் நாயரின் பந்தில் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ஆக இருந்தது. இவரை அடுத்து வேணுகோபால் ராவ் களமிறங்கினார். இந்த நிலையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த வார்னர், குமாரின் பந்தில் ஹாரிஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவர் எடுத்த ரன்கள் 77. அடுத்து வந்த பின்ச் சாவ்லாவின் பந்தில் 3 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து ஓஜா, வேணுகோபாலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சிறப்பாக கொண்டுசென்றனர். இதனால் 18.3 ஓவர்களில் டெல்லி அணி 200 ரன்களை தொட்டது. கடைசி 1.3 ஓவர்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து 31 ரன்களை சேர்க்க டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. வேணுகோபால் ராவ் ஆட்டமிழக்காமல் 28 ரன்களையும், ஓஜா 19 ரன்களையும் அடித்தனர். பஞ்சாப் அணி சார்பாக குமார், ஹுஸ்ஸே, சாவ்லா, நாயர் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் பால் வல்தாட்டி ஆகியோரும் துவக்கம் முதலே அதிரடியை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்துள்ள வல்தாட்டி இம்முறை ரன் குவிக்க தவறினார். இவர் 14 ரன்களை எடுத்திருந்தபோது இர்பான் பதானின் பந்தில் நாகரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து மார்ஷ், கில்கிறிஸ்டுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக கில்கிறிஸ்ட், அகார்கரின் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை அடித்தார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 97 ஆக இருந்தபோது கில்கிறிஸ்ட், ஆரோன் பந்தில் போல்டானார். இவர் எடுத்த ரன்கள் 42. இவரை அடுத்து தினேஷ் கார்த்திக் 6 ரன்களே எடுத்த நிலையில் அகார்கரின் பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். பின்னர் ஹுஸ்ஸே, மார்ஷுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். குறிப்பாக மார்ஷ் தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தினார். அணியின் ஸ்கோர் 15.2 ஓவரில் 153 ஆக இருந்தபோது ஹுஸ்ஸே 20 ரன்களில் ஹோப்ஸின் பந்தில் சேவாக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை தொடர்ந்து அபிஷேக் நாயர் களமிறங்கி சில அதிரடி ஷாட்களை ஆடினார். அணியின் ஸ்கோர் 184 க்கு வந்தபோது அதிரடியாக ரன் குவித்த மார்ஷ் அதிர்ச்சியளிக்கும் வகையில் மோர்கலின் பந்தை தவறாக கணித்து அடிக்க அது சேவாக்கின் கையில் கேட்ச் ஆனது. மிகப் பிரமாதமாக விளையாடிய மார்ஷ் 46 பந்துகளில் 95 ரன்களை குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இவர் ஆட்டம் இழந்ததும் பஞ்சாப் அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை மட்டுமே எடுத்தது. நாயர் ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும், ஹாரிஸ் 1 ரன்னையும் எடுத்திருந்தனர். டெல்லி தரப்பில் அகர்கர் 2 விக்கெட்டுகளையும், மோர்கெல், ஆரோன், பதான், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்று 5 போட்டிகளின் முடிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஐ.பி.எல். 4 வது தொடரில் டெல்லி அணி எடுத்த 231 ரன்களே இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.