எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் ஐந்து மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் வழி பாடப்புத்தகங்களையும் முதல்வர் வழங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 2021-22-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐ.டி.ஐ. முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழகத்தின் இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில், தமிழக அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தமிழகத்தின் தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்., நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு பிளம்பிங், அட்வான்ஸ்டு ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழக அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.
அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 30.06.2023-க்கு முன்னதாக தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமிழக அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 14.6.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, அரக்கோணம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், ஈரோடு மாவட்டம் ஈரோடு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல், சேலம் மாவட்டம் சேலம், மதுரை மாவட்டம் மதுரை, தேனி மாவட்டம் தேனி, போடி, திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, திருச்சி மாவட்டம் திருச்சி, மணிகண்டம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதன்மூலம், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் இந்த 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவர். இதுதவிர, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடையலாம்.
மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள் இதுவரை ஆங்கில மொழியில் இருந்து வந்தது. 2022-2023-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க, திறன் பயிற்சிகளை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ரூ. 6.80 கோடி செலவில் தமிழில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தமிழில் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு
22 May 2025புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
டெல்லியில் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் 2 பேர் கைது
22 May 2025புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.
-
மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது
22 May 2025சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
22 May 2025சென்னை: அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
22 May 2025சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
டில்லி புழுதிப் புயலில் சிக்கி சிறுமி உள்பட 3 பேர் பலி..!
22 May 2025புதுடில்லி: டில்லி யைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தியா - பாக். மோதலை தீர்த்து வைத்தது நான்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
22 May 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
-
கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்
22 May 2025கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
22 May 2025சேலம்: ஏற்காட்டில் கோடை விழா இன்று முதல் தொடங்குகிறது.
-
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
22 May 2025சென்னை: தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
-
இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
22 May 2025வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சு
-
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் விஜய் போட்டி..?
22 May 2025மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
புதிய நகைக் கடன் விதிமுறைகளை ஆர்.பி.ஐ. திரும்பப் பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
22 May 2025சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
22 May 2025நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
22 May 2025புதுடில்லி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
22 May 2025சென்னை: அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
-
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
22 May 2025சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.32 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
-
7 ஐ.பி.எல். தொடரில் 500 ரன்கள்: கே.எல்.ராகுல் புதிய சாதனை
22 May 2025மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
22 May 2025சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
-
கிரீஸில் நிலநடுக்கம்
22 May 2025ஏதன்ஸ்:கிரீஸ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்கள் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.
-
ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கத்தின் விலை
22 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனையானது.