எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற 8-ம் நாள் போட்டியின் போது 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே, 8 நிமிடம் 19.50 விநாடிகளில் முதலாவதாக வந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2018-ல் ஈரான் வீரர் ஹொசைன் கெய்ஹனி 8 நிமிடங்கள் 22.79 விநாடிகளில் ஓடியதே ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையாக இருந்தது. அதை தற்போது அவினாஷ் முறியடித்துள்ளார். மேலும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றுள்ளார்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில்:- இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் 20.36 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந், தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணி துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், கியானன் செனாய், ஜொராவர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளைக் குவித்து தங்கம் வென்றது.
துப்பாக்கிச் சுடுதல் மகளிர் அணி டிராப் பிரிவில்:- மணீஷ் கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகள் குவித்து 2-ம் இடம் பிடித்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 357 புள்ளிகள் குவித்த சீன அணிக்கு தங்கமும், 336 புள்ளிகள் குவித்த கஜகஸ்தான் வீராங்கனைகளுக்கு வெண்கலமும் கிடைத்தது.
கோல்ஃப்:-
மகளிர் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தை தாய்லாந்து வீராங்கனை அர்ப்பிசயா யூபோலும், தென்கொரிய வீராங்கனை ஹுயுன்ஜோ யூ 3-வது இடமும் பிடித்தனர்.
1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி:- ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜோதி யார்ராஜிக்கு வெள்ளி:-
மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 3-வதாக (12.91 விநாடி) வந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பிரிவில் பங்கேற்ற சீன வீராங்கனை யானி வூ (2-வது இடம்) தகுதியிழப்பு செய்யப்பட்டதால் ஜோதி யார்ராஜி இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதக்கம், வெள்ளிப் பதக்கமாக மாற்றப்பட்டது.
முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி:-
ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடம் (8.19 மீட்டர் தூரம்) பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
மகளிர் வட்டு எறிதல் போட்டி:-
இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலமும் (58.62 மீட்டர் தூரம்), மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகாசரா வெண்கலமும் வென்றனர். மகளிர் 50 கிலோ குத்துச்சண்டை அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 1-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் ரகாஸ்த் சுத்தாமத்திடம் தோல்வி கண்டார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பினார்.
பதக்கப் பட்டியலில் 4-வது இடம்:-
8-ம் நாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் ஜப்பானும், 3-வது இடத்தில் கொரியாவும் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
24 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனையானது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 May 2025புதுடெல்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன் என்று டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார
-
வருகிற 29-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
24 May 2025சென்னை : வருகிற 29-ந்தேதி முதல் தகுதியான விடுபட்ட பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி பேச்சு
24 May 2025மாஸ்கோ : அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்று கனிமொழி எம்.பி. பேச்சுதெரிவித்தார்.
-
மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர்: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்
24 May 2025அஹமதாபாத், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை - நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
24 May 2025சென்னை, கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கொச்சி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது
24 May 2025கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
-
கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் 2 லட்சம் மலர்ச் செடிகள்
24 May 2025கொடைக்கானல், கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று (மே 24) காலை தொடங்கியது.
-
பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
24 May 2025புதுடெல்லி, டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்தார்.
-
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தேர்வு: பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
மத்திய வரியில் 50 சதவீதம் தமிழகத்திற்கு தர வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2025புதுடெல்லி, 2024-2025-ம் ஆண்டிற்கான ரூ.2,200 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் உள்
-
நீலகிரி: பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலை செல்லத் தடை
24 May 2025கோவை : கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மே
-
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இலக்கு சாத்தியம்: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
24 May 2025புதுடெல்லி, மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்த பிரத
-
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை..!
24 May 2025புதுடெல்லி, கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை 8 நாட்களுக்கு முன்கூட்டியே, நேற்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
-
முதல்முறையாக ரஷ்யா-உக்ரைன் இடையே 390 கைதிகள் பரிமாற்றம்
24 May 2025ரஷ்யா : ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
-
புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்: ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் தகவல்
24 May 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2025
24 May 2025 -
கொரோனா பாதிப்பு: தயார் நிலையில் கேரளா, டெல்லி மருத்துவமனைகள்
24 May 2025புதுடெல்லி, பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது.
-
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
24 May 2025சென்னை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
24 May 2025சென்னை, நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
-
மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் ஜார்க்கண்டில் சுட்டுக்கொலை
24 May 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது: இந்தியா வாதம்
24 May 2025நியூயார்க், இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹ
-
பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்: ராகுல் காந்தி உறுதி
24 May 2025ஸ்ரீநகர், பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர்
24 May 2025பெர்லின் : பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.
-
பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்: ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி
24 May 2025கான்பூர் : நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது புது நம்பிக்கையை கொடுப்பதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்ப