எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உத்தரகாசி, உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நேற்று 9-வது நாளாகவும் நீடித்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.
கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 40 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 8 நாட்களாக போராடி வருகிறார்கள். முதலில் 3 அடி சுற்றளவு கொண்ட குழாய்களை உள்ளே செலுத்தி 40 தொழிலாளர்களையும் அதன் வழியாக மீட்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவில் தயாரான அதிநவீன எந்திரம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் சுரங்கப்பாதைக்குள் மண் சரிந்து விழுந்துள்ள 70 மீட்டர் தூரத்தில் 24 மீட்டர் தூரத்துக்கு தோண்டியது. அதற்கு பிறகு மலைப்பகுதியில் குறிப்பாக சுரங்கப்பாதை மேல் அதிர்வுகள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த சுரங்கப்பாதையும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அமெரிக்க எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிறிய குழாய் வழியே உலர் பழங்கள், உணவு வகைகள், ஆக்சிஜன் காற்று அனுப்பப்பட்டு வருகின்றன.
40 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் சற்று தைரியமான மனநிலையுடன் வெளியில் இருப்பவர்களுடன் பேசி வருகிறார்கள். 40 தொழிலாளர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை சிறிய ரக டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 40 தொழிலாளர்களையும் மீட்க சுரங்கப்பாதை மேல் பகுதியில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு மீட்பு பணிகளை செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகள் செய்வதற்கு எந்திரங்களை எடுத்து செல்ல மலை மீது சுமார் ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அந்த பணிகள் நடந்தது. கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல் நடந்த ஒரு விபத்தில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அதே தொழில்நுட்பத்தை கையாள முடிவு செய்து மலையில் சாலை அமைக்கும் பணியை எல்லைப்படை வீரர்கள் தொடங்கி உள்ளனர். நேற்றும் மலையில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
இதற்கிடையே 40 தொழிலாளர்களை மீட்பதற்கு 5 முன்னணி நிறுவனங்கள் களத்தில் குதித்து உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.எம்.சி.) சட்லஜ் நதி வாரியம் ரெயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தெக்ரி டெக்ரோ டெவலப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய 5 நிறுவனங்களும் 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணியில் தங்களது நிறுவனங்களை இறக்கி விட்டுள்ளன. இவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் துணையாக இருந்து பணிகளை தொடங்கி உள்ளனர். சட்லஜ் நதி நீர் நிறுவனத்தினர் மலை உச்சியில் இருந்து சுரங்கப்பாதையை இணைக்கும் துளையை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் சுரங்கப்பாதைக்குள் இருக்கும் 40 தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை இணைக்க 3 இடங்களில் துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்படி பல்வேறு வகைகளிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. நேற்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தது. நேற்று தொடங்கி இருக்கும் பணிகளில் திட்டமிட்ட வெற்றி கிடைத்தால் இன்னும் 2 தினங்களில் 40 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரியானா பெண் யூடியூபர் கைது
18 May 2025சண்டிகர் : அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. இவருக்கு யூடியூபில் 3 லட்சத்து 77 ஆயிரம் பாலோவர்கள் உள்ளனர்.
-
சாத்தான்குளம் விபத்து: கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள் மீட்பு
18 May 2025தூத்துக்குடி சாத்தான்குளம் விபத்து நடந்த கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள்மற்றும் பொருட்களை மீனவர்கள் மீட்டனர்
-
8,350 கோடி ரூபாய் நிதியுதவி: பாக்.கிற்கு புதிய நிபந்தனைகள்: சர்வதேச நாணய நிதியம் அதிரடி
18 May 2025புதுடில்லி : பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்து சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
மருமகனுக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கிய மாயாவதி
18 May 2025லக்னோ : தமது மருமகன் ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ் முதன்மை தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வழங்கி உள்ளார் மாயாவதி.
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: மா.செ.க்களுக்கு த.வெ.க. உத்தரவு
18 May 2025சென்னை : முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மாவட்டச் செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
-
வார விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
18 May 2025திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி
18 May 2025மஸ்கட் : ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலிகினர்.
-
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மண்ணில் புதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம்: விஜய்
18 May 2025சென்னை : மண்ணில் புதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம் என த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு
18 May 2025தர்மபுரி : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைப் பதிவு; அசோகா பல்கலை., பேராசிரியர் கைது
18 May 2025சண்டிகர் : ஆபரேசன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியதாக அசோகா பல்கலை பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஆயுதங்கள் மீட்பு
18 May 2025ஐதராபாத் : தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
18 May 2025புதுடெல்லி : நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் தீ விபத்து; இருவர் பலி
18 May 2025தஞ்சாவூர் : தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு: 17 எம்.பி.க்களுக்கு விருது
18 May 2025புதுடில்லி : பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் : காஷ்மீர் முதல்வர் உறுதி
18 May 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2025
19 May 2025 -
மீண்டும் 70 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
19 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
-
இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: தலைமை நீதிபதி
19 May 2025மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
-
பாக்., ஏவியது ஷாஹீன் ஏவுகணை: இந்திய ராணுவம் ஆய்வில் தகவல்
19 May 2025புதுடில்லி : ஷாஹீன் ஏவுகணை பாகிஸ்தான் ஏவியது இந்திய ராணுவம் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் ' ஏஸ் '
19 May 20257CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE).
-
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
19 May 2025புதுடில்லி : விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்
19 May 2025சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அ.த
-
கனமழை- புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
19 May 2025சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
19 May 2025சென்னை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜோரா கைய தட்டுங்க திரை விமர்சனம்
19 May 2025மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள்.