எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் டிசம்பரில் 6 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் காரணமாக டிசம்பர் மாதத்தில் வங்கிகள் அதிக நாள்கள் செயல்படாத நிலை ஏற்படவுள்ளது.
வங்கி ஊழியர்களின் சங்கங்கள், டிசம்பர் மாதம் 6 நாள்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) 6 நாள்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டிச.4 முதல் டிச.11 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் போதுமான ஆள்சேர்ப்பு கோரியும் மற்றும் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைகளை 3-ம் நிறுவனத்திற்கு கொடுப்பதை எதிர்த்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பல வங்கிகள் செயல்படாது என்றாலும், செல்போன் மற்றும் இணைய வழி செயல்பாடுகள் மூலம் வங்கிச் சேவைகள் தடையின்றி செயல்படும்.
வேலைநிறுத்தத் தேதிகள்:
டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவற்றில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 5: பாங்க் ஆப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 6: கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 7: இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளிலும் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் அவரது எக்ஸ் பக்கத்தில் 2019 முதல் 2023 வரை வேலைவாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, 2023 டிசம்பரில் 11 நாள்கள் வரை வங்கிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாள்களின் விடுமுறை மட்டும் 7 நாள்கள் ஆகும். நாடு முழுவதும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், பண்டிகை விடுமுறைகள், வார இறுதி நாள்கள் விடுமுறை என 24 நாள்கள் வரை செயல்படாத நிலை ஏற்படவுள்ளது. ஆனால், அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் மாநிலங்களில் அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் செயல்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.