முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏடூர் ஊராட்சிக் கழக செயலாளர் ஆர்.கோதண்டம் மரணம் அடைந்த தற்கு அதிமுக பொதுச் செயலாளரும்  தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்..

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஏடூர் ஊராட்சி அதிமுக  செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான ஆர். கோதண்டன் அகால மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அதிமுக தொண்டர் கோதண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனு தாபத்தையும் தெரிவித்துக்கொள்வ துடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த் திக்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்