முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின விழா: அஸ்ஸாம் - மணிப்பூரில் குண்டுவெடிப்பு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

இம்பால், ஆக. 16 - நாடுமுழுவதும் 67 வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடும் இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.  மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் மொய்ரான்கோம் என்ற இடத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. சேதம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை. இதேபோல அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த ஷிராங் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடித்துள்ளது. சேதம் அதிகமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதும் தலைநகர் இம்பாலில் 3 இடங்களிலும், தவ்பால் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்