எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை பிப்-23 - நெல்லை மாவட்டத்திலிருந்து லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற தொழிலாளி ஒருவர் அங்கு நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் உயிரிழந்ததாகவும், மேலும் 25க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மசூதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அழைத்துவர இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேணடுமென்றும் அவரது உறவினர்கள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன்கோட்டை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் லிபியா நாட்டில் ஹோண்டாய் கம்பெனியின் மூலம் அந்நாட்டில் டவர்கள் மற்றும் பவர் கிரிடுகள் அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கு திட்ட மேலாளராக பணிபுரிந்து வரும் சங்கரன்கோவில் தாலுகா பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் ஏற்பாட்டில் அங்கு சென்று வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்தனர். இந்நிலையில் சிலதினங்களாக லிபியா நாட்டில் அரசுக்கெதிராக உள்நாட்டு கலவரத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு தகவல் தொடர்பு உள்ளிட்ட எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் எங்கும் செல்ல முடியாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு வந்த கலவரக்காரர்கள் திடிரென அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்போவதாகவும் அங்கு தங்கியிருக்கும் அனைவரும் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு தங்கியிருந்த 25க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். அப்போது அங்கு வெடித்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த சண்முக தேவர் மகன் முருகையா(40), ஆலங்குளம் அருகேயுள்ள நாகல்குளத்தை சேர்ந்த அசோக்குமார்(24), களப்பாகுளத்தை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. மற்றவர்கள் அப்பகுதியிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையே படுகாயமடைந்த முருகையா உயிரிழந்து விட்டதாகவும், மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள தொழிலாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு செல்போன்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மசூதிக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் கடந்த சிலதினங்களாக சாப்பாடு மற்றும் குடிநீர் எதுவும் இல்லாமல் கழிப்பறை நீரை குடித்து உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களை பத்திரமாக மீட்டு செல்ல அரசை வலியுறுத்துமாறும் உறவினர்களுக்குத்தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவர்களிடமிருந்து நேற்று முன்தினம் முதல் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் யாரையும் தொடர்புகொள்ளவில்லையென தெரிகிறது. இதனால் அவர்களது தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே மசூதிக்குள் தஞ்சம் அடைந்திருப்பவர்களை பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் ஜெயராமனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அவரும் அவர்களை மீட்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் முருகையாவிற்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், கலையரசி என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.மகள் கலையரசிக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. மகன் கோபால கிருஷ்ணன் தற்போது 9ம் வகுப்பு படித்துவருகிறார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் கண்ணீர் மல்க கலெக்டரிம் தனது கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு மனுக்கொடுத்த சம்பவம் அனைவருக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.
லிபியாவிற்கு வேலைக்கு சென்றவர்கள் அனைவருமே சமீபத்தில்தான் அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அதுவும் கடன்வாங்கித்தான் வெளிநாடு சென்றுள்ளனர். எனவே அவர்களை மீட்டு தரவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணமும் வழங்கவேண்டுமன வலியுறுத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.