முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,மே.15 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி குரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையது அலி ஷா கிலானி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. 

வர்த்தக நகரமான லால்சவுக் மற்றும் அதையடுத்துள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் புறநகர் பகுதிகளிலும் மற்றும் சில பகுதிகளிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அரசு ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தார்கள். இருப்பினும் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இருந்தாலும் மாவட்டங்களுக்கு இடையே வழக்கம் போல் வாகனங்கள் இயங்கின. பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தன. காரணம் கடந்த ஆண்டு நடந்த ஒரு போராட்டத்தின் போது சில விஷமிகள் ஸ்கூல் பஸ்கள் மீது கல் வீசி தாக்கினார்களாம். இதன் காரணமாக நேற்று பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்