எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.- 18 - நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் பணநாயகத்தை மக்களின் ஜனநாயகம் வென்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற 14 வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதற்கு முன்பு வரை நேர்மையாகவும், ஜனநாயகமாகவும் நடைபெற்று வந்த தமிழகத்தின் பொது மற்றும் இடைத் தேர்தல்களில் முதல் முறையாக திருமங்கலம் இடைத் தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியது. அந்த தேர்தல் பணநாயக தேர்தலாகவும் மாறியது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று தேர்தல் அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வீடு வீடாக விநியோகித்தனர். அப்போது தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் தி.மு.க.வினர் மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிலர், பணத்தை பெற்றுக் கொண்டோம் என்பதால் தி.மு.க.வுக்கு பயந்து கொண்டே ஓட்டு போட்டனர். திருமங்கலம் தொகுதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகத்தை தோற்கடித்து பணநாயகத்தை வெற்றி பெற செய்தது. அங்கு தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தி.மு.க.வினர் கோடி கோடியாக பணத்தை செலவு செய்தனர். அங்கு தி.மு.க வெற்றி பெற்ற பின்னர் திருமங்கலம் பார்முலா என்ற புதிய வார்த்தை உருவானது. திருமங்கலத்தை தொடர்ந்து மதுரை மேற்கு, மத்தி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடைத் தேர்தல்களிலும் திருமங்கலம் பார்முலாவையே தி.மு.கவினர் பின்பற்றினர். அங்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து தி.மு.கவை வெற்றி பெறச் செய்தனர். இனி எந்த தேர்தல் நடந்தாலும் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க புதுக் கணக்கு போட்டது.
இந்நிலையில் தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெறும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத் தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவை கடைப்பிடித்து மீண்டும் தி.மு.கவை ஆட்சிக்கு கொண்டு வர தி.மு.க. தலைமையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கணக்குப் போட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தலை சந்திக்க தயாராகினர். இவர்களின் திருமங்கலம் பார்முலாவை கண்டு எதிர்க்கட்சிகளும் கலக்கத்தில் இருந்தன. அப்படியிருந்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் மிகுந்த தைரியத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கினார். அவர்களின் திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கவும் கூட்டணி கட்சியினருடன் ஜெயலலிதா செயல் திட்டம் வகுத்தார்.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீண்குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியாயமான நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதில் இடையூறு ஏற்பட்டது. பறக்கும் படை, வீடியோ குழுக்கள் என பல குழுக்கள் அமைத்து தி.மு.க வினர் கடத்திய பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்து போன தி.மு.க.வினர் பின்னர் சுதாரித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு பொறுப்பாளர்கள் மூலம் ஓட்டுக்கு ரூ. 200 ஐ இரவில் மின்தடை ஏற்படுத்தி வழங்கினர். தொகுதிக்கு ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்தனர்.
இதையறிந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சியினர், நாம் தமிழர் இயக்க நிறுவனர் இயக்குனர் சீமான் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில், தி.மு.கவினர் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா உங்களுக்கு தருகின்றனர். உங்களிடம் இருந்து கொள்ளையிட்ட, உங்களது உழைப்பை சுரண்டிய பணத்தை தானே தருகின்றனர். உங்களது பணத்தை உங்களுக்கு தரும் போது அதை நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ளுங்கள். ஓட்டுக்களை மட்டும் அவர்களுக்கு போட்டு விடாதீர்கள். அப்படி காசுக்காக தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட்டால் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள முடியாது என பிரச்சார மேடைகளில் பேசினர். இவர்களின் இந்த பிரச்சாரமும், தி.மு.க ஆட்சியில் பட்ட துன்பங்களையும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். பணத்தை பெற்றுக் கொண்ட தி.மு.கவிற்கு ஓட்டளித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் நிலை என்ன ஆகும் என மக்கள் யோசித்து தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்து தி.மு.கவினர் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.கவுக்கு எதிராகவும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க ஏக மனதாக முடிவு செய்தனர். தேர்தலின் போது பணம் கிடைக்கப் பெறாதவர்கள் தி.மு.கவினர் வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் உள்ள ஓட்டுக்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லையே. எப்போது கொடுப்பீர்கள் என கேட்டு, பணத்தை பெற்றனர். இது தவிர இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். ஆனால் தற்போது ரூ. 200 மட்டுமே தருகின்றனரே என தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபமடைந்தனர். தற்போது ரூ. 200 கொடுத்து விட்டு ஜெயித்து ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்க நினைக்கும் தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். பணத்திற்கு தங்களை தி.மு.க அடிமையாக்கப் போகிறார்கள், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை, நடுத்தர மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர் என்பதை நன்கு உணர்ந்த தமிழக மக்கள் பணநாயகத்தை முறியடிக்க தீர்க்கமாக முடிவு செய்தனர். அவர்களது கோபங்களை வெளிப்படுத்த தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏப்ரல் 13 ல் அவர்கள் தங்களது கோபங்களை தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்குகளாக பதிவு செய்தனர். முடிவுகள் தி.மு.க வுக்கு மிக மோசமான தோல்வியை ஏற்படுத்தியது. இதன் மூலம் பணநாயகத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்ற தி.மு.கவினரின் எண்ணமும், தப்புக்கணக்கும் தோற்றுப் போயுள்ளது. ஜனநாயகத்தை நம்பிய அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று 3 வது முறையாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக ஆகியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.