எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.21 - மேலூர் அருகே மலையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு மலையில் குடியேறினர். அதிகாரிகள் பொருட்களை அள்ளிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் புராதன மலை உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதியை குவாரிக்காக அரசு தனியாருக்கு ஏலம் விட்டுள்ளது. இந்த மலையை ஏலம் எடுத்தவர் உடைக்க துவங்கினார். இதை தடுத்து நிறுத்தக்கோரி கடந்த 16 ம் தேதி அரிட்டாப்பட்டி கிராம மக்கள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். ஆனால் மலை உடைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலை அரிட்டாபட்டி, லட்சுமிபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரேஷன்கார்டுகளுடனும், பொருட்களுடனும் மலையில் குடியேறினர். மலையை வெட்டி எடுக்கும் பணியை நிறுத்தும் வரை ஊருக்குள் செல்வதில்லை என அங்கேயே அமர்ந்திருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகளிடம் ரேஷன்கார்டுகளை ஒப்படைக்கப்போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மலையில் வெயிலில் அமர்ந்திருந்த மூன்று பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசாரும், ஆர்டிஓ சரசுவதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகள் மலையில் முற்றுகையிட்ட கிராம மக்களின் பொருட்களை எடுத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மலையில் இருந்த கிராம மக்கள் ஊருக்குள் திரும்பினர். இது தொடர்பாக மேலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆர்டிஓ பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் மாலை பேசியும் முடிவு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவது எனவும், அதுவரை அமைதியாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்துஏ மலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் கூறியதாவது, எங்கள் ஊர் பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கற்பாறைகளான மலை உள்ளது. இந்த மலை தற்போது தனியாருக்கு ஏலம் விடப்பட்டு அவர்கள் மலையை உடைத்து வருகிறார்கள். இந்த செயல்களால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராமத்தினரின் கலாச்சாரம், நம்பிக்கை, வாழ்வாதாரம், நினைவுச்சின்னம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கற்காலம் முதல் உள்ளது. மன்னர் காலம் மற்றும் புத்த, சமண சமய நினைவுச் சின்னங்களாகவும் விளங்கி வருகிறது. மேலும் கிராம மக்கள் இந்த மலையில் குடவறை கோவில் அமைத்து வழிபட்டும் வருகிறார்கள். இந்த மலையில் சிவன்கோவில், காளிகோவில், சிலை, மகாவீரரின் உருவம், புத்தரின் சிலை மேலும் சமணர்கள் இங்கு வாழ்ந்து வந்தததற்கான அடையாளங்களும் உள்ளன. மலையில் கல்வெட்டுகள், ஊற்று, பஞ்சபாண்டவர் படுக்கைகளும் உள்ளன.
வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மலை 1966லேயே புராதன சின்னம் மற்றும் தொல்இயல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்றும் அறிவிக்கப்படடுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. அப்படிப்படட இந்த மலையை உடைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். அரிட்டாப்பட்டி மட்டுமின்றி சுற்றியுள்ள கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், வள்ளாலபட்டி, கூலானிபட்டி, சண்முகநாதபுரம் என பல ஊர்களை சேர்ந்த மக்கள் விவசாயத்தைமட்டுமே நம்பி உள்ளனர். இவர்கள் இந்த மலையையும், மழையையும் நம்பிதான் உள்ளனர்.கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கீழையூர், கீழவளவு, திருவாதவூர், வரிச்சியூர் உள்ள பகுதிகள் கிரானைட், மற்றும் கல்குவாரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நிலை தற்போது எங்கள் ஊருக்கும் வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மலை உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரை நாங்கள் மலையை விட்டு வரமாட்டோமா என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.