முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண் கல்லால் அடித்து கொலை

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, ஜூன்.2 - உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு நகரில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். ரஷ்யாவில் இருந்து தற்போது தனியாக பிரிந்துள்ள நாடு உக்ரைன். சமீபத்தில் இங்குள்ள நகர் ஒன்றில் அழகிப்போட்டி நடந்தது. அதில் 19 வயது நிரம்பிய முஸ்லீம் பெண் ஒருவர் கலந்துகொண்டார். இந்த போட்டியில் அவருக்கு 7 வது இடம் கிடைத்தது. இந்த நிலையில் தனது வீடு திரும்பிய அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதற்கிடையே ஒருவாரம் கழித்து அவரது சொந்த கிராமத்திற்கு அருகில் ஒரு காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். உடல் முழுவதும் கல்லால் அடித்த காயங்கள் இருந்தன. ஷூரியத் சட்டத்தின் படி உக்ரைனில் முஸ்லீம் பெண்கள் அழகிப்போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. அதைமீறி அந்தப்பெண் அழகிப்போட்டியில் கலந்து கொண்டதால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்