எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட்ஆப் ஸ்பெயின், ஜூன் - 8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒரு டுவெண்டி -20 போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கேப்டன் மகேந்திரசிங் தோனி, காம்பீர், யுவராஜ்சிங் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வில் இருப்பதால் இந்திய அணி இளம் வீரர்களுடன் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அடுத்ததாக ஒருநாள் போட்டித் தொடர் துவங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களாக சிம்மன்ஸ் மற்றும் எட்வர்ட்ஸ் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். இந்திய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் 7-வது ஓவரின் துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் விக்கெட்டை 23 ரன்களிலேயே இழந்தது. சிம்மன்ஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குமாரின் பந்துவீச்சில் ஹர்பஜன்சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். இவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 28 ஆக இருந்தபோது 4 ரன்களை மட்டும் எடுத்திருந்த பிராவோ, முனாப்பட்டேலின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இந்நிலையில் சர்வான் துவக்க வீரர் எட்வர்ட்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்தது. ஆனால் ஸ்கோர் 59 ஆக இருந்தபோது 21 ரன்களை எடுத்திருந்த எட்வர்ட்ஸ், ஹர்பஜனின் சுழலில் சிக்கினார். அந்த கேட்சை அருமையாக பிடித்தவர் விராட் கோஹ்லி. அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடினார். சாமுவேல்ஸ் மற்றும் சர்வான் ஜோடி அணியை மீட்கும் வகையில் விளையாடியது. இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களை எடுத்தது. இந்நிலையில் 38-வது ஓவரின் கடைசி பந்தில் 56 ரன்களை எடுத்திருந்த சர்வான், முனாப் பட்டேலின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 141. அடுத்து சாமுவேல்சுடன் பிராவோ இணைந்தார். இந்த ஜோடியும் ஓரளவு ரன்களை உயர்த்தியது. அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தபோது 55 ரன்களை எடுத்திருந்த சாமுவேல்ஸ், ரெய்னாவின் அற்புதமான பந்தில் கிளீன்போல்டானார். தொடர்ந்து அதிரடி பிராவோவும் 22 ரன்களை எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்தில் பார்த்தீவ் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. ராம்பால் ஆட்டமிழக்காமல் 9 ரன்களையும், மார்ட்டின் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், சுரேஷ் ரெய்னா, குமார், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. துவக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 13 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து துவக்க வீரர் ஷிகார் தவானுடன், இளம் வீரர் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். கோஹ்லி 2 ரன்களே எடுத்த நிலையில் ராம்பாலின் அற்புதமான ஒரு ஆர்ம் பாலில் விக்கெட் கீப்பர் பாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து பத்ரிநாத் களமிறங்கினார். இவர் தனது பங்கிற்கு 17 ரன்களை சேர்த்த நிலையில் பிஷூவின் பந்தில் விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து தவானுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 104 க்கு உயர்ந்தபோது அரை சதம் கடந்திருந்த இளம் வீரர் தவான், மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரோகித் சர்மாவுடன் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் எண்ணிக்கை 184 க்கு உயர்ந்தபோது சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் பந்தில் சிம்மன்ஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 10 ரன்களை எடுத்த நிலையில் ராம்பாலிடம் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். தொடர்ந்து 44.5 ஓவர்களிலேயே 217 ரன்களை அடித்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும், ஹர்பஜன் சிங் 6 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றிகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பிரமாதமாக இருந்தது என்றார். சில வீரர்கள் பீல்டிங்கில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி, இன்னும் கூடுதலாக ரன் குவிக்க தவறியதே தங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என்றார். இந்திய அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியான இடைவெளியில் வீழ்த்தினாலும் தாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.