எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக 2 - தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க. தொகுதிகள் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிப்பட கூறினார்.
மயிலாடுதுறை தொகுதிக்கு சொந்தம் கொண்டாடி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பேசுகிறார்.
2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் கூறினார்.
நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சட்டசபையில் நேற்றுஉள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருட்செல்வன் பேசினார். அவர் பேசும்போது மயிலாடுதுறை தொகுதிக்கு கலை கல்லூரி ஒன்றை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.
அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து பேசினார்.
நான் இன்று(நேற்று) காலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது யாரும் நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க. தொகுதிகள் தான். உறுப்பினர் மயிலாடுதுறையை சொந்தம் கொண்டாடி பேசுகிறார்.
2016ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறையில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போது திண்ணம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். (அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம்)
தொடர்ந்து அருட்செல்வன் பேசுகையில், எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்று குறிப்பிட்டபோது, அண்ணா தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உடனே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து கூச்சல் போட்டார்கள். அனைவரையும் அமைதியாக உட்காரும்படி சபாநாயகர் தனபால் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 44.3 சதவீத ஓட்டுக்களை பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்திருக்கிறது என்று கூறினார்.
தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் பேசுகையில், தேர்தல் கமிஷன் பற்றி ஒரு கருத்தை சொன்னார்.
அப்போது மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து, தேர்தல் கமிஷன் பற்றி குறை சொல்ல உங்களக்கு உரிமை இல்லை. நீங்கள் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். உள்ளாட்சி தேர்தலில் உங்களது சாயம் வெளுத்துவிட்டது. இடைத் தேர்தல்களிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெற வில்லை. பார்லிமெண்ட் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தீர்கள் என்று காட்டமாக கூறினார்.
தொடர்ந்து தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் பேச முற்பட்டார். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து பேசினார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் அம்மாவை தவிர எந்த அரசியல் கட்டி தலைவர்களுக்காகவது நெஞ்சில் தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட தயாரா? அப்படி தனித்து போட்டியிட்டால், 234 தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட்டை இழப்பார்கள். தனித்து போட்டியிடும் துணிச்சலும், தைரியமும், அம்மா ஒருவருக்கு தான் உண்டு. நெஞ்சில் உறுதி மிக்க தலைவர் அம்மா என்று கூறினார்.
அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து பேசினார்.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 217 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. தனித்து போட்டி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறினார். (அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம்)2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் கூறினார்.
நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் பேசினார்.
தொடர்ந்து அருட்செல்வன் பேசுகையில், அரசியல் வரலாற்றில் தோல்வி அடையாத கட்சிகளே இல்லை என்று கூறியபோது, மீண்டும் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து பேசினார்.
வெற்றி தோல்விகள் வரும் , ஆனால் நீங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். டெபாசிட்டை இழந்து இருக்கிறீர்கள். ஆண்டவனுடனும், மக்களுடனும் கூட்டணி என்றீர்கள். ஆனால் கடைசியில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தீர்கள். தோற்றுப்போய் நிற்கிறீர்கள்.
தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் எழுந்து கோபமாக பேசினார். சபாநாயகரை பார்த்து மிரட்டும் தோனியில் பேசினார். அப்போது சபாநாயகர் அவரை எச்சரித்தார். மிரட்டுவது போன்று பேசுவது சரியில்லை. முறையில்லாமல் நடக்காதீர்கள் என்று சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.
தொடர்ந்து உணவு அமைச்சர் காமராஜ் எழுந்து உறுப்பினர் அருட்செல்வனுக்கு 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதலமைச்சர் அம்மா ஓட்டு கேட்டார். அதனால் தான் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இங்கு சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிறார் என்று கூறினார்.
உடனே அருட்செல்வன் எழுந்து, முதலமைச்சர் ஓட்டு கேட்டது உண்மை. எங்களது கேப்டனும் ஓட்டு கேட்டார் என்று கூறினார்.
உடனே அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து அவரது தலைவர் ஓட்டு கேட்டதாக கூறினார். அதற்காக அவர் வெற்றி பெறவில்லை. அம்மா ஓட்டு கேட்டதால் தான் அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார். உங்கள் தலைவர் ஓட்டுகேட்டதால் தான் வெற்றி பெற்றேன் என்று சொல்கிறீர்களே, பார்லிமெண்ட் தேர்தலில் உங்கள் தலைவர் ஓட்டு கேட்டாரே, ஏன் வெற்றி பெறவில்லை? முதலமைச்சர் அம்மாவினால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்பதை நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் மக்கள் வௌிப்படுத்தி விட்டனர் என்று காட்டமாக கூறினார்.
இத்துடன் இந்த விவாதம் முடிவுற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.