முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை நிருபர் கொலைக்கு சந்தன கடத்தல்காரன் காரணமா?

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,ஜூன்.17 - மும்பையில் கடந்த 11 -ம் தேதி மிட் டே பத்திரிகை நிருபர் ஜோதிர்மயி டே பைக்கில் வந்த மர்ம ஆசாமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். தனிப்படை போலீசார் தானே மாவட்டம் மும்ப்ராவில் அன்வர், மைதீன் இக்பால் ஹதேலா, ஷேக் ஆகியோரை பிடித்தனர். இவர்கள் மும்பை தாதா சோட்டா ஷகீலின் உதவியாளர்கள். கொலையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் துப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து 3 பேரும் நேற்றுமுன்தினம் இரவு விடுவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் ஜோதிர்மயி டே கொலைக்கு சந்தன கடத்தல்காரன் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சந்தன கடத்தல்கரான் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சந்தன கடத்தல் பற்றிய செய்தியை வெளியிட ஜோதிர்மயி டே திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை வெளியிடாமல் இருக்கஅந்த தொழில் அதிபர் ரூ.10 லட்சம் கொடுக்க முன் வந்துள்ளார்.  அதை ஏற்க ஜோதிர்மயி டே மறுத்ததால் தாதா கும்பல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்