முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தலில் மாமனாரை எதிர்க்கும் மருமகன்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி -  டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடும் தனது மாமனாரை எதிர்த்து மருமகன் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

டெல்லி ஜானக்புரி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடுபவர் ஜகதீஷ் முகி. இவர் 5 முறை  எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். இதே தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் இவரது மருமகன் சுரேஷ் குமார். இதனால் அந்த தொகுதியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுரேஷ் குமார் கூறியதாவது:

இம்முறை பாஜ 100 சதவீதம் தோல்வியை தழுவ உள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை இணைத்ததன் மூலம் அதன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜவில்  தலைவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது. அதனால்தான் தோற்றவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் தலைவர்களாக காட்ட வேண்டிய நிலை பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது.

கிரண்பேடி  சிறந்த அதிகாரியாக இருக்கலாம். ஆனால் சிறந்த அரசியல்வாதி கிடையாது.கடந்த முறை காங்கிரஸ் தவறவிட்ட வெற்றியை இம்முறை கைப்பற்றும். காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் முறையாக நடைபெற்றன என்பதை மக்கள் தற்போது நேரடியாக உணரத் தொடங்கி விட்டனர்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து