முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு தேனீர் ஊற்றிக் கொடுத்த மோடி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி தேனீர்  ஊற்றிக் கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா ஜனாதிபதி மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நேராக ராஜ்காட் சென்ற அவர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அங்கு மரக்கன்று ஒன்றை அவர் நட்டு வைத்தார்.

அதன் பிறகு அவர் ஐதராபாத் ஹவுஸ் சென்றார். அங்கு அவருக்கு மோடி மதிய விருந்து அளித்தார். விருந்தின்போது அவர்கள் இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். ஐதராபாத் ஹவுஸ் பூங்காவில் இருவரும் சிறிதுநேரம் நடந்து கொண்டே பேசினர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் இருவரும் அமர்ந்தனர். அப்போது மோடி ஒபாமாவுக்கு தேனீர்  ஊற்றிக் கொடுத்தார். தேனீர் குடித்த பிறகு மீண்டும் ஒபாமாவும், மோடியும் பேச்சுவார்த்தையை துவங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து