எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.12 - 3 ஆண்டுகளுக்கு நிலுவை இல்லாமல் திறம்பட செயல்படும் விசைத்தறி சங்கங்களுக்கே இலவச வேட்டி- சேலை தயாரிக்க ஆர்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 95 சதவிதம் கொள்முதல் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நூல் மற்றும் ரொக்க முன் பணத்தை கோஆப்டெக்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்று அதனை சேலைகளாகவோ அல்லது வேட்டிகளாகவோ நெய்து முன் பணத்தை சரிக்கட்டுதல் செய்கின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.4.57 கோடி அளவிற்கு இந்த விசைத்தறி சங்கங்களிலிருந்து இன்றைய தேதி வரை சரிக் கட்டுதல் செய்யப்படாமல் இந்தத் தொகைகள் பெரும்பாலும் விசைத்தறி சங்கங்களிடம் நிலுவையிலுள்ளது. கடந்த வாரம் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிக்கை இதுபோன்ற விசைத்தறி சங்கங்களில் பெரும்பாலான சங்கங்கள் வெறும் சங்கங்கள் என்ற செய்தியினை வெளியிட்டுள்ளது. இதனை பகுதியாக ஆமோதிக்கும் விதமாக உதவி இயக்குநர் (கைத்தறி), கோயம்புத்தூர் அவர்களுடன் கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆய்வு நடத்தியபோது இந்த சங்கங்களே இல்லை என்றும் இவை காணாமல் போய்விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. பொது மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் இதுபோன்ற திரும்பப் பெறாத முன்பணத் தொகைகளையோ அல்லது விலைக்கு வாங்கி தரப்படும் பருத்தி நூலையோ தருவது இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என்று முடிவு செய்யப்படுகிறது, இதன் அடிப்படையில் கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட உத்தரவு உடனடி நடவடிக்கைக்காக அமல்படுத்தப்படுகிறது.
1.விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் கோ-ஆப்டெக்ஸால் பதிவு செய்யப்படும் முன்னர் அவற்றின் உறுப்பினர்கள் குறித்த முழு விவரங்களைப் பெற வேண்டும். உறுப்பினர்களின் முகவரிகள், மொபைல் / தொலைபேசி எண்கள் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும்.
2.முகவரிகளோ அல்லது மொபைல் / தொலைபேசி எண்களோ தரப்படாத எந்த உறுப்பினர்களும் உண்மையான உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
3.உதவி இயக்குநர் (கைத்தறி) அல்லது கோஆப்டெக்ஸின் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைப் பார்வையிட்டதற்கான அத்தாட்சிகள் இணைக்கப்பட வேண்டும்.
4.சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (கைத்தறி), இந்த புதிய சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வேறு எந்த சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லை என்று சரிபார்த்ததற்கான சான்றிதழ்களை தரவேண்டும். இது போலியாகத் தரப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் மீது துறை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்படும்.
5.இவ்விதமாக சரிபார்த்த பின்னர் கோ-ஆப்டெக்ஸில் பதிவு செய்யப்படும் விசைத்தறி சங்கங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு கடனுக்கு நூலோ அல்லது முன்பணமோ வழங்கப்பட மாட்டாது.
6.கோஆப்டெக்ஸில் ஆர்டர் பெற வேண்டும் என்றால் நூலுக்கான தொகையை 100 சதவீதம் செலுத்தி அதன் அடிப்படையில் துணிகள் நெய்து தரலாம்.
7.3 ஆண்டுகளுக்கு நிலுவை இல்லாமல் திறம்பட செயல்படும் விசைத்தறி சங்கங்களுக்கு மட்டுமே நடப்பாண்டில் இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் ஆர்டர்கள் வழங்கப்படும். தொகை நிலுவை இருக்கும் பட்சத்தில் எந்த சங்கங்களுக்கும் இந்த ஆண்டு உத்தரவு வழங்கப்பட மாட்டாது. 8.பொதுவாக பதிவு செய்யப்படும் விசைத்தறி சங்கங்கள் மேற்கூறியவாறு நூல்களை முழுமையாக தொகையை செலுத்திப் பெற்று அதற்கான தொகையை கோஆப்டெக்ஸிற்கு தரப்படவில்லை என்றால் அவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும். கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் எந்தவித சங்கங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோஆப்டெக்ஸ் எந்த பணிகளையும் வழங்காது. கறுப்புப் பட்டியலில் வைப்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் தான் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சம்பந்தப்பட்ட விசைத்தறி சங்கங்கள் கோஆப்டெக்ஸில் நூலைப் பெற்று அதற்கான துணிகளைத் தரவில்லை என்றோ அல்லது முன்பணம் பெற்று உரிய நேரத்தில் துணிகளை வழங்கவில்லை என்று தெரிய வந்தாலோ இச்சங்கங்கள் தானாகவே கறுப்புப் பட்டியலுக்குள் கொண்டு செல்லப்படும்.
9.ஏற்கனவே பதிவு செய்து பணி செய்துவரும், சங்கங்களும், நூலையோ அல்லது முன்பணத்தையோ பெற்றுக்கொண்டு உரிய நேரத்தில் துணிகளை தரவில்லை என்றால் இச்சங்கங்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படும்.
மேற்கூறிய விதி முறைகளை கோஆப்டெக்ஸில் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று இதன் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.