முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் கோவா முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, கோவா மாநில முதல்வர்  லட்சுமிகாந்த் பார்சேகர், மனைவி மற்றும் மகள், மகனுடன் அந்தமான் தலைநகர் போர்ட் பிளையருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு சென்றார்

இதற்காக கோவாவில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம்   சென்னை வந்தார். அவரை வரவேற்பு அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் நேற்று முன்தினம்  இரவு 7½ மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு முதல்-மந்திரி குடும்பத்துடன் வந்தார். அவரை கோவில் நிர்வாக அலுவலர் பிரபாகர்ராவ், கமிட்டி உறுப்பினர்கள் மோகன்ராவ், சத்தியநாராயணராவ் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர் முதல்வர்  லட்சுமிகாந்த் பார்சேகர் குடும்பத்துடன் கோவிலில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மாலை அணிவிக்கப்பட்டதுடன், கோவிலில் செயல்படுத்தப்படும் சேவைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
முதல்வர்   வருகையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து