முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோப்பையை வெல்ல போவது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை

சனிக்கிழமை, 23 மே 2015      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா - 8-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இன்று  சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கடந்த 17ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவிலிஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் முறை 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின. முதல் தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுப்போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது.

இதையடுத்து நேற்று முன் தினம் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ல ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிகின்றன.

சென்னை அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 2010, 2011 ம் ஆண்டுகளி்ல சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2-வது தடவையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. 2013ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து