எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.இது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது.
வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கடந்த 11 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றார். சென்னை ஆர்.கே. நகர் தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை கடந்த 17-ம் தேதி ராஜினாமா செய்தார். வெற்றிவேலின் ராஜினாமாவையடுத்து காலியாகியுள்ள ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தொகுதியில் ஜுன் மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, 27.6.2015 அன்று நடைபெற உள்ள (11) டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜெயலலிதா ( கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் )நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறயுள்ளார்.
கடந்த 23–ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள். ஜெயலலிதா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். எனவே ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் கடந்த 17–ந்தேதி அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார். அவர் அதனை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து தேர்தல் கமிஷன் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் மாதம் (அடுத்த மாதம்) 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. அந்த தொகுதியில், வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 3-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 10-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
மனுக்கள் பரிசீலனை 11-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.
மனுக்களை வாபஸ் பெற 13-ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். 27-ந்தேதி (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் பணிகள் அனைத்தும் ஜூலை 2-ந்தேதியுடன் நிறைவடைகின்றன என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு யந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. அண்ணா தி.மு.க.வின் 4 ஆண்டு கால ஆட்சியில் திருச்சி, ஸ்ரீரங்கம், சங்கரன் கோவில், ஏற்காடு, ஆலந்தூர், புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 6 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. இதே போன்று கூட்டுறவு சங்க தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. ஓராண்டுக்கு முன்பு பார்லிமெண்ட் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட அண்ணா தி.மு.க. 37 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்தது. அது மட்டுமல்ல அகில இந்திய அளவில் அண்ணா தி.மு.க. 3–வது இடத்தை பிடித்தது.
ஜெயலலிதாவின் சாதனைகள், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, பாசம், அன்பு காரணமாக வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது. எப்படியாவது ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கங்கணம் கட்டின. ஆனால் ஜெயலலிதாவின் செல்வாக்கை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவரது வெற்றியையும் தடை செய்ய முடியவில்லை. நாளுக்கு நாள் ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறோம் என்று கூறி அனைத்து கட்சி தலைவர்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்தார்.
பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளை டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்தித்தார். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு, கூட வந்த கட்சி தலைவர்களை முகம் சுழிக்க வைத்தார். மு.க. ஸ்டாலின் தனது பங்குக்கு தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை கொடுக்கும் சாக்கில் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்தார். பேட்டி கொடுத்தார். இத்தனை நாடகங்கள் நடந்தன.
வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 5–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
ஜெயலலிதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துவருவதை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்தியது. இனி ஜெயலலிதாவின் செல்வாக்கை குறைக்க முடியாது. அவரை வெல்ல முடியாது. இப்போது தேர்தலில் போட்டியிட்டு மோசமான நிலைமைக்கு போவதைவிட தேர்தலில் போட்டியிடாமல் கவுரவமாக ஒதுங்கி கொள்வோம் என்று தி.மு.க. ஒதுங்கிவிட்டது. மற்ற கட்சிகளும் போட்டியிட தயக்கம் காட்டுகின்றன. தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காத நிலைதான் ஏற்படும். எனவே வீணாக பலப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என நினைக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.