எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில், கேரள அரசின் அக்கிரமபோக்கை கண்டித்து மதுரையில் ஆக.17-ம் தேதி வைகோ தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்- ஆட்சிமன்றக்குழு அரசியல் ஆலோசனைக்குழு - அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை கட்சியின் அவைத்தலைவர் திருப்nullர் சு. துரைசாமி தலைமையில் சென்னை, தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதுரையில் உண்ணாநிலை அறப்போர்!
தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கக் கூடிய ஆபத்தாக, முல்லைப்பெரியாறு பிரச்சினை உருவெடுத்து உள்ளது. பென்னி குக் கட்டிய அணை வலுவாக இருக்கின்றது என்று, ஆண்டுக்கணக்கில் வழக்கு நடைபெற்று, அதில் உச்சnullதிமன்றத்தில் மூன்று nullநீதிபதிகள், தமிழகத்தின் அடிப்படை உரிமையை நிலைநாட்டி, nullநீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும், இதில் கேரள அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும், திட்டவட்டமான தீர்ப்பை, 2006 பிப்ரவரி 27 இல் உச்சநீnullதிமன்றம் தந்து இருந்தது.
அதை எதிர்த்து, கேரளச் சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கும் கேரள அரசுக்கு உரிமை உண்டு என்றும், இதில் எந்த nullநீதிமன்றமும் தலையிட முடியாது என்றும் நிறைவேற்றிய சட்டம், இந்திய அரசின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பகிரங்கமாக விடுக்கப்பட்டு உள்ள சவால் ஆகும். இந்தப் போக்கை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமையில், மத்திய அரசு தவறியது. இதுகுறித்துத் தமிழக அரசு உச்சnull நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில், உச்சnull நீதிமன்றமும், கேரள அரசின் விபரீதமான நடவடிக்கையைக் கண்டிக்கவும் இல்லை,ரத்துச் செய்யவும் முன்வரவில்லை.
வழங்கப்பட்ட null நீதியைப் பறித்துக் கொள்ளும் வகையில், ஏற்கனவே உச்ச நீnullதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்களான பிரார் குழுவும், மிட்டல் குழுவும் தந்த அறிக்கைகளை உதாசீனம் செய்து விட்டு, பென்னி குக் கட்டிய அணை வலுவாக உள்ளதா? என்று ஆராயவும், கேரள அரசு உத்தேசிக்கின்ற புதிய அணை பற்றிக் கருத்து அறியவும், ஐந்து nullநீதிபதிகளைக் கொண்ட உச்சnullதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட்ட செய்தியாகும்.
உச்சnullநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பின்படி அமைக்கப்பட்ட குழு, ஆய்வுகள் மேற்கொள்ளும் காலகட்டத்திலேயே, நாங்கள் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று கேரள அரசு அறிவித்ததோடு, அதற்கு ஐந்து கோடி ரூபாய் முதலீடாக ஒதுக்கியது. தற்போது புதிய அணைக்கான ஆய்வு வேலைகளில் பொறியாளர்களை ஈடுபடுத்தி
வருகிறது. பென்னி குக் அணையை எவ்விதத்திலும் சேதப்படுத்திச் செயல் இழக்கச் செய்வதே கேரள அரசின் உண்மையான திட்டம். உத்தேசிக்கப்படும் அணை பள்ளத்தில் அமையும் என்பதால், கேரளம் விரும்பினாலும்கூட, பின்னாளில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரவே முடியாமல் போய்விடும்.
தெற்குச் சீமையில், ஐந்து மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பாசனத்தை இழப்பதற்கும், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் குடிதண்ணீருக்கும் வழி இல்லாமல் போய்விடும்.
ஆபத்து வருமுன் காப்பதுதான அறிவு உடைமை ஆகும். எனவே, பென்னி குக் கட்டிய அணையைப் பாதுகாக்கவும், கேரள அரசு புதிய அணையைக் கட்ட விடாமல் தடுக்கவும், உரிய நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டாக
வேண்டும்.
எனவே, தென்பாண்டி மண்டலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து போராடி வருகின்ற ம.தி.மு.க, ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று, முல்லைப்பெரியாரில் தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப்போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில், மாபெரும் உண்ணாநிலை அறப் போராட்டத்தை, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்துவது என்று, இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது.
இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னுர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில், இந்திய இராணுவம் தற்போது பயிற்சி அளித்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
ஈழத்தமிழர்கள் படுகொலை; டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதல்களில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னமும், இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டு
வாடித் தவிக்கின்றனர்.
சிங்களர்கள் நடத்திய அதிர்ச்சி தரும் படுகொலைக் காட்சிகளை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதன் விளைவாக, உலகின் பல நாடுகள் உண்மை நிலையை அறியத்தொடங்கி உள்ளன.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்கிமூன் அமைத்த மூவர் குழு தந்த அறிக்கையும், சிங்கள அரசு மனிதநேயச் சட்டங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என அனைத்துத் தமிழர்களையும் அழிக்கின்ற திட்டத்தோடு, இனப்படுகொலை நடத்தியதை உறுதி செய்து உள்ளது.
நாஜிகள் செய்த கொடுமைகளைப் போல, ஈழத்தமிழர்களை அழிக்கக் கொடுஞ்செயல் புரிந்த இனக்கொலை யுத்தத்துக்கு, காங்கிர தலைமையிலான இந்திய அரசு ஆயுத உதவி செய்ததுடன், சிங்கள அரசின் போரைப் பின்னால் இருந்து அனைத்து வழிகளிலும்
ஊக்குவித்து இயக்கியது, தமிழர்களுக்கு எதிரான, மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகும்.
இராஜபக்சேயும், அவனது கூட்டாளிகளும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு, வட்டக்கோட்டைத் தீர்மானத்தின்படி ஒரே தீர்வான, சுதந்திர இறையாண்மை உள்ள தமிடிந ஈழத் திருநாட்டை அமைப்பதற்குப் பொது
வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்; இலங்கை அரசோடு இந்திய அரசு செய்து கொண்டு உள்ள வணிக, பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செடீநுதிட வேண்டும்; இதுவரை அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவு தந்து வரும் போக்கை நிறுத்திக்கொண்டு, இனியாவது சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்தக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திடவும், இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கோடு, பிரச்சினையை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்கவும், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களையும் வேண்டிக் கொள்ளவும்; தலைநகர் டெல்லியில், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று,
நாடாளுமன்றத்துக்கு எதிரே, பொதுச்செயலாளர் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று, இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.