முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி: 12ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை: மகாளய அமாவாசையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 12ம் தேதி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 12ம் தேதியன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு வடக்காடி வீதியில் 16 கால் மண்டபத்தின் அருகில் புரோகிதம் மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு கூடுதல் புரோகிதர்கள், தண்ணீர் வசதி, பக்தர்கள் அமர்வதற்கு நிழல் பந்தல் கள் மற்றும் டிக்கெட் வழங்குவதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்தல் போன்ற சிறப்பு ஏர்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருவதாக கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்