முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நல கூட்டணியில் த.மா.கா.: மூத்த தலைவர்கள் அதிருப்தி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை : தே.தி.மு.க. - மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளதால் அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரணியன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வின் கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து தேமுதிக - மக்கள் நல கூட்டணியில் இணைந்து த.மா.கா. 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது த.மா.கா. மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனிடம் தொலைபேசியில் கேட்டபோது, ‘‘இன்றைக்கு எதுவும் கூற விரும்பவில்லை. மக்கள் நல கூட்டணியில் த.மா.கா. இணைந்தது குறித்த எனது கருத்தை பிறகு தெரிவிப்பேன்’’ என்றார். தே.மு.தி.க. பிளவுபட்டது போல அநேகமாக த.மா.கா.விலும் பிளவு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்