எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக இந்த ஆண்டு நடக்க இருந்த பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் நுழைவு தேர்வு கிடையாது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பிநட்டா அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட மாட்டாது . திட்டமிட்டபடியே நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் ஜனாதிபதி அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய கல்வி வாரியம் நுழைவு தேர்வு நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அல்லாது மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களில் நடத்தப்படும் நுழைவு தேர்வு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த நுழைவு தேர்வு சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு விட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவு த்தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கில் “விருப்பப்படும் மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாம். அவர்கள் தனியாக நுழைவு தேர்வு நடத்த அனுமதிக்கலாம்” என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இதனை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.
இந்த ஆண்டே பொது நுழைவு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். நுழைவு தேர்வு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என பல மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என நட்டா உறுதி அளித்தார். இதற்கிடையில் பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைக்க அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மருத்துவ பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான அவசர சட்டம் என்பதால் உடனடியாக அதில் கையெழுத்திட பிரணாப் மறுத்துவிட்டார். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மத்திய சுகாதாரதுறை அமைச்சர் நட்டா பிரணாப்பை சந்தித்து விளக்கம் அளித்தார். அவசர சட்டத்துக்கான காரணங்களை அவர் விளக்கினார். இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கு மட்டும் மருத்துவ பொது நுழைவு தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். இந்த அவசர சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதிக்காத பட்சத்தில் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் கவுன்சலிங் அடிப்படையில் மட்டும் நடத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 9 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
26 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
16 May 2024சென்னை:26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட க
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 May 2024சென்னை:காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் நே
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
கெஜ்ரிவால் பிரசாரத்தில் தலையிட மறுப்பு:அமலாக்கத்துறை கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகப்பு
16 May 2024புதுடெல்லி:கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் விவகாரத்தில் சட்டப்படியாகதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவரின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட