எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : திருச்சி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர்ப்பாசன கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தொடங்கிவைத்து தொழில் நுட்ப கையேட்டினையும் வெளியிட்டார். கருத்தரங்கை தொடங்கி வைத்து தொழில் நுட்பகையேட்டினை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் பேசியதாவது.விவசாயிகள் நுண்ணீர் பாசத்தினால் குறைந்த அளவு நீரை அதிக பரப்பிற்கு பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கலாம். இதனால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. செடிகள், காய்கறிப்பயிர்கள், பழமரங்களுக்கு வழங்கப்படுவதால் பயிரின் மகசூல் அதிகரிக்கப்படுகிறது. தேவையான இடங்களுக்கு மட்டும் நீர் பாயிச்சுவதால் களையின் ஆதிக்கம் குறைகிறது. மேலும் களை எடுக்கும் செலவும் குறைகிறது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் செடிகளுக்கு தேவையான உரத்தை நுண்ணீர் பாசன அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் உரம் எந்தவித சேதாரம் இன்றி பயிர்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மகசூல் கூடுவதுடன் செலவும் குறைகிறது.
சராசரியாக பத்து ஆண்டுகளில், ஐந்து ஆண்டுகள் நன்றாக மழை பொய்து வருகிறது. இரண்டு ஆண்டுகள் குறைவான மழையே பொய்கிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வறட்சி நிலவிவருகிறது. வறட்சி நிலவும் காலகட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். நிலத்தடி நீரை சேமிக்க நடைமுறையில் உள்ள பாசன முறைகளை மேற்கொள்வதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது. எனவே நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க, தேவையான அளவு தண்ணீர் எடுத்து நுண்ணீர்பாசனம் மூலம் பாய்ச்சபடுவதால், நிலத்தடி நீர்மட்டத்தை இயற்கையாக பாதுகாக்கப்டும். நுண்ணீர் பாசனம் அமைப்பதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி அதிக அளவு பயன்பெற வேண்டும். உலக அளவில் சொட்டுநீர் பாசனம் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை 2000ம் ஆண்டு முதல் சொட்டுநீரின் பயன்பாடு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 20 இலட்சம் எக்டர் பரப்பளவில் நுண்ணீர்பாசனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகமாக மகாராஷ்டிராவில் சுமார் 2.50 இலட்சம் எக்டர் பரப்பிலும், ஆந்திரபிரதேசத்தில் 2.00 இலட்சம் எக்டர் பரப்பிலும் சொட்டுநீர்ப்பாசனம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் எக்டர் பரப்பில் சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்புநீர்ப்பாசனம், மழைத்தூவான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக பரப்பில் நுண்ணீர்பாசனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம், உப்பிலியபுரம், தாத்தையங்கார்ப்பேட்டை, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மருங்கப்புரி மற்றும வையம்பட்டி வட்டாரங்களில் அதிக அளவில் நுண்ணீர்ப்பாசனம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2015-2016ம் ஆண்டு 1137 எக்டர் பரப்பளவில் நீர் ஆதாரம் பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த 2016-2017ம் ஆண்டு 537 எக்டர் பரப்பளவிற்கு நிதி ஆதாரம் பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்து சொட்டு நீர் பாசன அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர் பாசன திட்டத்தில் அதிக அளவில் பங்குபெற்று பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார். இக்கருத்தரங்கில் நீர்பாசன மேலாண்மைத்துறை ஒய்வுபெற்ற பேராசிரியர் ஓ.எஸ்.சீனிவாசன், குமுளுர் வேளாண்க்கல்லூரி பேராசிரியர் லலிதா, நவலூர் குட்டப்பட்டு தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் ஈஸ்வரன் மற்றும் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, துறையூர், தாத்தையங்காhப்;பேட்டை, தொட்டியம், மண்ணச்சநல்லூர் மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.