எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக விநியோகிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம்; கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது :
முதல்வர் ஜெயலலிதாவின் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகருக்கு தென்மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்களும், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் என அனைவரும் அதிகளவில் வந்து செல்லும் புராதன நகரமாக திகழ்கிறது. தற்போது நடைபெறுகின்ற இந்த கூட்டத்தின் நோக்கம் மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் நடைபெறுகிறது. தற்போது எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. வரும் காலங்களில் மழை எந்தளவு பெய்யும் என்று கணக்கிட முடியாது. எனவே மதுரை மாநகராட்சி மக்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் செய்து தர வேண்டும்.
தற்போது வைகை அணையில் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில் 46 அடியாக இருந்தது. அதே போல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக உள்ளது. கடந்த ஆண்டில் 118 அடியாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டில் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உள்ள குடிநீர் பற்றாகுறையை சமாளிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் தற்போது 2085 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மேலும் 150 போர்வெல்கள் போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர்; பற்றாக்குறை இருக்கும் இடங்களில் கூடுதலாக லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக மதுரை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அதை போர்க்கால அடிப்படையில் செய்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் ஊரக மற்றும் நகரமைப்பு துறை திட்ட நிதி, சுற்றுலா துறை திட்ட நிதி, சிறப்பு சாலைகள் திட்ட நிதி, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, அபிவிருத்தி இடைவெளி நிரப்பும் திட்ட நிதி, மாமன்ற உறுப்பினர்கள் வார்டு மேம்பாட்டு நிதி ஆகிய பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இக்கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குஇரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், முன்னாள் மேயர் (பொ) கு.திரவியம், துணை ஆணையாளர் செ.சாந்தி, நகரப்பொறியாளர் மதுரம், நகரமைப்பு அலுவலர் ரெங்க நாதன், உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன்;, உதவி ஆணையாளர்கள் கௌசலாம்பிகை, பழனிச்சாமி, செல்லப்பா நாராயணன், செயற்பொறியாளர்கள் அரசு, ராஜேந்திரன், சந்திரசேகர், சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.