எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி ஸ்திரமடைவதற்காக காத்திருந்ததாக தனது கேப்டன்சி விலகல் பற்றி எம்.எஸ் டோனி கூறியுள்ளார்.
புனேயில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டோனி கூறியதாவது:
ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி என ஒவ்வொரு போட்டிக்கும் தனி தனி கேப்டன்கள் இருப்பது இந்திய அணிக்கு ஒத்து வராது, எனவேதான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில் இருந்து விலகினேன்.
எதிர்பார்த்தேன்
நான் சரியான தருணத்திற்காக காத்திருந்தேன். டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சவுகரியமான ஒரு ஸ்திர நிலையை எட்டட்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர் ஒரு நாள், டெஸ்ட்போட்டி என அனைத்து போட்டிகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்க தயாராகிவிட்டார். இதனால் பதவி விலகல் குறித்து முடிவெடுத்தேன். இதில் தவறில்லை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் இது. இதுதான் தருணம் என்று நான் உணர்ந்தேன்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று விராட் கோலிக்கு வழிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். சாம்பியன்ஸ் டிராபி வரை நான் கேப்டனாக நீடித்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது.
திடீர் விலகல் ஏன்?
ஆஸ்திரேலியாவில் பாதி தொடரிலேயே நான் ஏன் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம், ஆனால் நாம் பெரிய புலத்தை யோசிக்க வேண்டும். எது அணிக்குப் பயனளிக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இன்னொரு போட்டி என்ற எனது எண்ணிக்கையால் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
சஹா ஆஸ்திரேலியாவில் இருந்தார், அவர் ஆஸ்திரேலியாவில் இன்னொரு டெஸ்ட் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். எனவே அனைத்தும் நன்றாகச் சென்றால் அயல்நாட்டு தொடர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்தான் விக்கெட் கீப்பராகச் செல்லப் போகிறார். அவருக்கு அதற்கு ஆஸ்திரேலியாவில் அனுபவம் பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், அதே போல் விராட் கோலிக்கும்தான்.
துணை கேப்டன்
அணியில் விக்கெட் கீப்பர்தான் அறிவிக்கப்படாத துணை கேப்டன், களவியூகம் அமைப்பது துணைக் கேப்டன் அல்லது விக்கெட் கீப்பரிடம் வழக்கமாக அளிக்கப்படுவதுதான். இந்த இடத்தில் இனி எனது பணி என்னவெனில் கேப்டன் என்ன விரும்புகிறார் என்பதை நான் நெருக்கமாக கவனிக்க வேண்டும். அவருக்கு தேவையான களவியூகம் என்னவென்பதையும் கவனிக்க வேண்டும்.
நான் விராட் கோலியிடம் இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன், களவியூகம் எப்படி அமையவேண்டும், பீல்டர்களை எங்கு நிறுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை கலந்தாலோசித்துள்ளேன். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் தேர்ட் மேன் நிலையை அவர் எப்படி விரும்புகிறார். ஷார்ட் தேர்ட் மேனா? கொஞ்சம் வைடாக வேண்டுமா? என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் ஷார்ட் தேர்ட் மேன், அல்லது ஷார்ட் பைன் லெக் எனக்கு சற்று அருகில் இருக்க வேண்டும் அதுதான் பேட்ஸ்மெனுக்கு கடினமாக இருக்கும் என்று நினைப்பேன். இதற்கெல்லாம் நான் மாற்றிக்கொள்ள வேண்டும், ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய மாற்றங்கள் இருக்காது.
அறிவுரை தருவேன்
தேவைப்படும்போது, விராட் கோலிக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்குவேன். களவியூகமே நான் அதிகம் கவனம் செலுத்தும் இடம். நான் கோலியுடன் ஆலோசனை செய்ய வேண்டும், நான் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் அதுதான் உத்தி ரீதியாக சரியானது என்று அவர் நினைக்கும் போது நான் என் இஷ்டப்படி நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது, ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. எப்படியிருந்தாலும் சில ஆட்டங்களுக்கு களவியூகம் மீது என் கவனம் இருக்கும்.
ஒரு வீரரின் திறமை என்னவாக இருந்தாலும் அதனை 100% பயன்படுத்திக் கொள்வதுதான் எனது கேப்டன்சி அணுகுமுறை. 90% முதல் 110% வரை சாதித்தால் உண்மையில் நன்றாக ஆடுவதாகவே அர்த்தம்.
நல்ல முடிவு
80% திறமை உள்ள வீரரிடமிருந்து 150% ஆட்டத்திறனை நாம் எதிர்பார்க்க முடியாது. இங்குதான் நடைமுறை ரீதியாக நாம் சிந்திக்க வேண்டும், நேர்மையாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும், சிலருக்கு ஓரிரு வார்த்தைகளே போதும் சிலருக்கு கடுமையான வார்த்தைகள் தேவைப்படும். சிலருக்கு பார்வை ஒன்றே போதும். ஒரு தருணத்தில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.
அணியின் திறன் என்னவென்பதை அறிந்திருந்தால் அவர்கள் தங்கள் திறனுக்கேற்ப ஆடுவதை உறுதி செய்ய முடியும். சில வேளைகளில் பிரச்சினை ஏற்படும், 2-3 பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்காமல் இருப்பார்கள், கஷ்டப்படுவார்கள். இது ஒரு பெரிய தடைதான். ஆனால் நாம் பெரிய தொடர்களை கருத்தில் கொள்ள வேண்டும், ஐசிசி உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் யார் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால் முடிவில் ஒரு தனிப்பட்ட வீரருக்கு சில ஆட்டங்களே அளிக்க முடியும். ஒட்டுமொத்தமாக இதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது, இதற்குமே வீர்ர்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம்.
இளம் வீரர்கள்
நான் கேப்டன்சி ஏற்றபோது அணியில் நிறைய மூத்த வீரர்கள். ஆனால் அவர்கள் ஒருகட்டத்தில் ஓய்வு பெற வேண்டி வந்தது. எனவே மாறும் அணியை இயல்பாக்குவது முதல் கடமை. ஒரு நல்ல விஷயம் என்னவெனில், மூத்த வீரர்கள் போன பிறகு அணிக்கு வந்த இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக ஆடிவருகின்றனர் என்பதே..
நாம் அவர்களில் முதலீடு செய்துள்ளோம், இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கு திருப்தியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தப் பயணத்தை நான் நேசித்தேன். இந்த திருப்திதான், அது வெற்றிகாலங்களாக இருந்தாலும் தோல்வி காலங்களாக இருந்தாலும், நம் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. பயணம் என்பதே முக்கியம். எனது பயணம் தொடருகிறது. இவ்வாறு டோனி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 9 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை
16 May 2024சென்னை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்
16 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த 10 நாட்களில் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.