முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் மனித குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

ஜகார்த்தா  - இந்தோனேசியாவில் மனித குரங்கை கொன்று சமைத்து சாப்பிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அழியும் பட்டியலில்...
மனித குரங்கு அழியும் வன விலங்குகள் பட்டியலில் உள்ளது. எனவே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தோனேசியாவில் அவை பாமாயில் விளை நிலங்களில் வசிக்கின்றன. இந்த நிலையில் அங்கு சுற்றித் திரிந்த ஒரு மனித குரங்கை பிடித்த 3 பேர் அவற்றை கொன்று இறைச்சியாக வெட்டினர். பின்னர் அவற்றை சமைத்து சாப்பிட்டனர்.

3 பேர் கைது
இவர்கள் பாமாயில் மர விவசாய பண்ணையில் பணி புரியும் ஊழியர்கள் ஆவர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் கைது செய்தனர். கொன்று சமைக்கப்பட்ட மனித குரங்கின் எலும்புகள் மற்றும் காயவைக்கப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அழியும் வனவிலங்குகள் பட்டியலில் மனித குரங்கு இருப்பதால் அவற்றை கொல்வது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்