முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும பதவிகளுக்கான இலவச பயிற்சி : கலெக்டர் சு. பழனிசாமி அழைப்பு

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ள 15711 பணியிடங்களுக்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை – இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் பணிகாலியிடங்கள் மற்றும் TNPSC Gr-II(A), Gr-IVபோட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் தகுந்த பயிற்சி வல்லுநர்களின் துணைக்கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மேற்படி போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விரிவான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20.02.2017 முதல் துவங்க உள்ளது. அலுவலக வேலைநாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 04.00 முதல் 06.00 மணி வரை மேற்கண்ட தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். மேலும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு(வுநுவு) மட்டும் காலை 10.00 முதல் மாலை 05.00 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அலுவலக வேலைநாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சு. பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்