எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நல்லம்பள்ளி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 2139 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மற்றும் ரூ. 1 கோடியே 21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (26.02.2017) வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில் உணவு பொருள் வழங்கல் துறையின் சார்பில் தருமபுரி வட்டத்திற்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட 495 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட 496 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், காரிமங்கம் வட்டத்திற்குட்பட்ட 523 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 2139 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது :- தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பதவியேற்றவுடன் முதற்கட்டமாக 8000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக 2000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்குட்பட்ட குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வேளாண் உபகரண பொருட்கள் (ரோட்டாவேட்டர்) அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டை என்பது மிக அவசியமான ஒன்று. அதனால் அம்மாவின் அரசானது பொதுமக்கள் பயன்பெறுமஃ வகையில் தருமபுரி மாவட்டத்தில் விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மாவட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து சரியான முறையில் விண்ணப்பித்து பயனடைய முன் வர வேண்டும்.அதேபோல் அம்மாவின் அரசானது தாலிக்கு தங்கம் 4 கிராமாக இருந்ததை தற்போது 8 கிராம உயர்த்தி வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் படித்த ஏழை எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியாக 10 மற்றும் 12 ம் படித்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும், பட்டம், பட்டயம் படித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கி வருகிறது. அம்மா பரிசு பெட்டகம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 12 ஆயிரம் வழங்கி வந்ததை தற்போது ரூ. 6 ஆயிரம் உயர்த்தி ரூ. 18 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பெருமக்களின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தும், 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கியும், நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்டுகள் எனவும், விசைத்தறிக்கு கட்டணமில்லாமல் வழங்கிய மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கி வருகிறார்கள். அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி தந்துள்ளார்கள். வேலைக்கு செல்லும் மகளிருக்கு ஸ்கூட்டி வாங்குவதற்கு 20 சதவீதம் மானியம் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டபடி தற்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இக்கணினி செயலியின் பயனாக அங்காடியில் பொருட்கள் இருப்பு விவரம், அங்காடி திறக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்களை குடும்ப அட்டைதாரர்கள் அறியவும் வாங்கிய பொருள்களின் விவரங்களை தமது கைப்பேசி குறுஞ்செய்தியின் மூலம் தெரிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இடைவிடாது இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 என்ற எண்களுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அனைத்து அலுவலர்களுடைய தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் ஆகியவை செயலியில் உள்ளன. பொதுமக்கள் அவசர காலத்தில் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அவசர கால உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) மல்லிகா, பாலக்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர். அன்பழகன், மத்தியக்கூட்டுறவு வங்கி இயக்குநர் வேலுமணி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, ஜெர்த்தலாவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வீரமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.