எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி, பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நடைபெற்ற யானைகள் நலவாழ்வு நிறைவு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
பின்னர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது
பகுத்துணரும் ஆற்றலும் உணர்ந்ததை எடுத்துச் சொல்லும் திறனும் கொண்ட சிறப்பான பிறவி மானிடப்பிறவி ஆகும். ஆனால் மனிதனுடைய உணர்வுகளைப் போலப் பகுத்துணரும் ஆற்றலுடன் தன் பிணைகளை விட்டுக்கொடுக்காது காலமெல்லாம் காப்பாற்றி வாழும் கூட்டுக் குடும்பக் கட்டமைப்பைப் பெற்றவை யானைகள் என்பது சங்க இலக்கியங்கள் மூலமாக நமக்கு தெரியவருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களும் நம்முடைய அன்புக்கு உரியவை என்ற அடிப்படையில் விலங்குகளிடத்தில் அன்பும், கருணையும் கொண்ட அம்மா 2003-ஆம் ஆண்டில் மயிலாப்பூரில் ஒரு யானை, கடுமையாக நடத்தப்பட்டு பிச்சை எடுப்பதற்கு அதனை முறைகேடாக பயன்படுத்துவதை அறிந்து மருத்துவ சிகிச்சையும் அடைக்கலமும் அளிப்பதற்காக அந்த யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி அதனைப் பாரமரிக்க ஏற்பாடுகள் செய்தார்.
யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் போதுமான ஒய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்கவும், உடல்நலத்தைப் பேணவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென அம்மா ஆணையிட்டு 2003 ஆண்டில் நீர் வசதிமிக்க சிறப்பான சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை (தெப்பக்காடு) வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்திட ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து நடப்பு முகாமினையும் சேர்த்து இது வரை 9 யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு ரூ.1,16,85,000/- (ரூபாய் ஒரு கோடியே பதினாறு இலட்சத்து எண்பத்தி ஐந்தாயிரம்) அரசால் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான 31 யானைகளும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து 2 யானைகளும் ஆக மொத்தம் 33 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்றுள்ளன.
முகாமிற்கு வர இயலாத யானைகளுக்கு அவைகள் இருக்கும் இடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்று உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டது. முகாமில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம், பயோ பூஸ்ட் ஆகியன வழங்கப்பட்டது. காலை மாலை இருவேளையும் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் எல்லா யானைப் பாகன்களுக்கும் சிறப்புப் பயிற்சியும் தரப்பட்டது. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த யானைகளின் சிறப்பு நலவாழ்வு முகாமினை சுற்றிலும் பாதுகாப்பினை பலப்படுத்த சோலார் தொங்கும் மின்வேலி, சோலார் மின்வேலி மற்றும் தகர தடுப்பு வேலி ஆகியன அமைக்கப்பட்டது. காட்டு விலங்குகளின் நடமாட்டத்தினை காண்காணிக்கும் வகையில் முகாமில் ஐந்து இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாகன்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்காக சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ அரங்கு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தினசரி மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தது. அதே போன்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களை கொண்டு தினசரி யானைகளுக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், யானை பாகன்களின் மனநலம் புத்துணர்வு பெறும் வகையில் பொழுது போக்குக்கூடம், விளையாட்டு களம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டதுடன், யோகா பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கடந்த 04.03.2017 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியத்துறைகளின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்று வந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இனிதே நிறைவு பெற்றது என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரசண்முகமணி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியன் இ.வ.ப மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.