எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் அதிக வார்டுகளை அதிமுக பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு கடந்த 17 ம் தேதியும், ஊரக பகுதிகளில் 19ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஊரக பகுதியான மதுரை கிழக்கில் பதிவான வாக்குகள் ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், மதுரை மேற்கில் பதிவான வாக்குகள் திருப்பாலை யாதவா கல்லூரியிலும், திருப்பரங்குன்றத்தில் பதிவான வாக்குகள் திருநகரிலுள்ள சீதாலட்சுமி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், மேலூரில் பதிவான வாக்குகள் தாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அலங்கா நல்லூரில் பதிவான வாக்குகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டியில் பதிவான வாக்குகள் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் செல்லம்பட்டியில் பதிவான வாக்குகள் கருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியிலும், சேடப்பட்டியில் பதிவான வாக்குகள் எஸ்.கோட்டைப்பட்டியிலுள்ள பராசக்தி மேல்நிலைப்பள்ளியிலும், திருமங்கலத்தில் பதிவான வாக்குகள் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டி.கல்லுப்பட்டியில் பதிவான வாக்குகள் பேரையூர் காந்தி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கள்ளிக்குடியில் பதிவான வாக்குகள் கே.வேளக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன.
நகராட்சி பகுதிகளான திருமங்கலம் நகராட்சியில் பதிவான வாக்குகள் திருமங்கலம் பிகேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டி நகராட்சியில் பதிவான வாக்குகள் கவுனம்பட்டி சாலையிலுள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், மேலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் எஸ்எஸ்வி பிரைமரி பள்ளியிலும் எண்ணப்பட்டன.
மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு வேட்பாளர்களுக்கான வாக்குகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது. இதில் துவக்கத்தில் இருந்தே அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதே போல் வார்டு கவுன்சிலர்களும் ஏராளமானோர் வெற்றி பெற்றனர். திமுகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே வார்டுகள் கிடைத்தன. மீதமுள்ள அனைத்து வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாவட்டத்தில் அதிமுக பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக 10 தொகுதிகளையும் பிடித்தது. இதே போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓரிரு வார்டுகளை தவிர மீதமுள்ள அனைத்து வார்டுகளையும், 3 நகராட்சிகளையும் அதிமுக கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் வெற்றி வாகை சூடியது அ.தி.மு.க.
மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியது. தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெருவாரியான இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகளுக்கும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 3 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது. திருமங்கலம் நகராட்சி அதிமுக வேட்பாளர் உமாவிஜயன் 11 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலூர் நகராட்சி அதிமுக வேட்பாளர் செ.சரவணன் 11 ஆயிரத்து 569 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல் உசிலம்பட்டி நகராட்சி அதிமுக வேட்பாளர் பஞ்சம்மாள் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்தினர். தொண்டர்கள் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.