முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 1.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சங்கர் வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 1.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

                                         105 மனுக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடனுதவி,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 105 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பொ.சங்கர் அறிவுரை வழங்கினார்.

                             மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் டாப்செட்கோ கடன் வழங்கும் விழாவில் 13 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 500_க்கான கடனுதவிக்கான காசோலைகளையும், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் மல்பெரி நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்து 500 வீதம் 9 விவசாயிகளுக்கு ரூ.94 ஆயிரத்து 500ம், பட்டுவளர்ப்பு மனை கட்டுவதற்கு மானியமாக 5 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்து 500ம், பட்டுவளர்ப்பு மேற்கொள்ள தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு பட்டு விவசாயி ஒருவருக்கு ரூ.52 ஆயிரத்து 500 வீதம் 5 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500ம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர்(மனுக்கள்) பரமசிவம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினம், உதவி ஆணையர்(கலால்) முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, துணைப்பதிவாளர்கள் பார்த்திபன், முகமது மீரான் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்