எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி. அக். - 29 - தென்காசியில் பிரசார ரத யாத்திரை மூலம் வருகை தந்த பாஜக வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சுதந்திர இந்தியாவில் ஊழல் நிறைந்த ஆட்சி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிரான யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பிரசார ரதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எல்.கே. அத்வானி நேற்று காலை தனது ரதயாத்திரையை மதுரையிலிருந்து துவங்கி நெல்லை மாவட்டம் சிவகிரி வழியாக வாசுதேவநல்லூர் வந்தார். அங்குள்ள தரணி சர்க்கரை ஆலையின் விருந்தினர் இல்லத்தில் மதிய உணவு மேற் கொண்டார். அதன்பின் வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், இடைகால் வழியாக மாலை 5.30 மணிக்கு தென்காசி வருகை தந்தார். தென்காசியில் பாஜக. சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் தென்காசி வேன் ஸ்டாண்டில் தனது பிரசார வாகனத்தில் நின்றபடி ஆங்கிலத்தில் பேசினார். அதனை பா.ஜ.க வின் முன்னாள் மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது அவர் பேசியதாவது :- தென்காசி வாழ் சகோதர, சகோதரிகளே துவக்கத்தில் உங்கள் தாய் மொழியான தமிழில் பேசமுடியாமைக்கு வருந்துகிறேன். எனது பேச்சை எனது சகோதரர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து பேசுவார். இந்த யாத்திரை ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளான அக்டோபர் 11 ம் தேதி பிகாரில் இருந்து புறப்பட்டது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா, அருணாச்சலபிரதேசம், ஆந்திரா, ஜார்கண்ட் ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக இந்த யாத்திரை மூலம் தீபாவளி தினத்தில் தமிழகத்திற்கு வந்துள்ளேன். 25 ஆண்டுகளில் நான் 6 வது முறையாக நடத்துகின்ற யாத்திரை இது ஆகும். இதுவரை நடைபெற்ற 5 யாத்திரைகளில் இல்லாத அளவுக்கு இந்த யாத்திரைக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வலுவாக இல்லை என்றாலும் கூட மக்கள் இந்த யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் திரண்டு
வந்திருந்தார்கள். அப்போது மழை கடுமையாக பெய்த போதும் மக்கள் கலைந்து செல்லாமல் தங்கள் இருக்கைகளை தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு எனது பேச்சை கேட்டு கொண்டிருந்தார்கள். அந்த காட்சி என்னை மிகவும் நெகிழச்செய்தது.
அதைப்போலவே தென்காசியிலும் இந்த மக்கள் எனது வருகைக்காக நீண்ட நேரம் காத்து கொண்டு இருக்கிறீர்கள். இப்படித்தான் வழிநெடுக மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று எங்களை வரவேற்கிறார்கள். எனவே அவர்களை சந்தித்து பேசிவிட்டு வர தாமதம் ஆகிவிட்டது. இங்கிருந்து புறப்பட்டு இரவில் நான் திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். 1952 முதல் 2009 வரை இந்தியாவில் நடை
பெற்றுள்ள 15 பாராளுமன்ற தேர்தல்களை நான் பங்கு பெற்றுள்ளேன். அனைத்து பிரதமர்களையும் நான்
மிகவும் அருகில் இருந்து கூர்ந்து பார்த்து வருகிறேன். நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன்சிங் அமைச்சராக இருந்த போது அவர் மிகவும் மரியாதைக்குரியவராக இருந்தார். ஆனால் இப்போது மன்மோகன்சிங் பிரதமராக பதவியேற்ற பின் நாளுக்கு நாள் ஒவ்வொரு ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 1947 முதல் இன்று வரை நடைபெற்றுள்ள ஆட்சிகளை ஒப்பிட்டு பார்த்தால் ஊழல் மிகுந்த ஊழல் நிறைந்த ஆட்சி மன்மோகன்சிங் ஆட்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது நடைபெற்று வரும் மத்திய அரசில் பங்கு பெற்ற பல அமைச்சர்கள் ஊழல் காரணமாக பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிலும் பலர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்க தக்கவிஷயம்ய காங்கிரஸ் கூட்டணி
கட்சியான திமுகவினர்கள் மட்டும் இந்த ஊழலில் சம்பந்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. ஆனால் அவர்களில் யாரும் விசாரிக்க படவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் ஊழலில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் காரர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தின் துவக்கத்தில் ஒரு கீதம் ஒளிபரப்பப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கவும் மாட்டேன், லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன் என்று நான் பேசியுள்ளேன். அரசாங்கம் ஊழல் நிறைந்ததாக இருந்தாலும் மக்கள் லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன் வாங்கவும் மாட்டேன் லஞ்சத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று மக்கள் அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும். இந்த யாத்திரையின் குறிக்கோள் ஊழல் மூலம் சுவிஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி பணமும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். 25 லட்சம் கோடி ரூபாய் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் நமது நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடியும். அப்போது தான் நாம் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்வதில் பெருமை படமுடியும் தென்காசி மக்களுக்கு மிக்க நன்றி இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் தென்காசியிலிருந்து அந்த ரதயாத்திரை குற்றாலம், செங்கோட்டை, வழியாக திருவனந்தபுரம்
சென்று அங்கு இரவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த ரத யாத்திரையில் எல்.கே.அத்வானியுடன் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன் ராஜூலு, எச்.ராஜா, சரவணபெருமாள், உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். மேலும் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும் தென்காசிக்கு எல்.கே.அத்வானி வருகையை முன்னிட்டு தென்காசி நகரில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோட்ட
பொறுப்பாளர் அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுடலையாண்டி, பாலகுருநாதன், குமரேசசீனிவாசன், தென்காசி நகரத்தலைவர் விவேக்பாண்டியன், பாண்டித்துரை, மணி, ராமன், சண்முகசுந்தரம், கார்த்திக், பாலசுப்பிரமணியன், குத்தாலிங்கம், திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பா.செல்வி, நகர்மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி, சங்கசுப்பிரமணியன்,
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.