எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கக்கதாசம் தரப்பு ஜவளகிரி கிராமத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று(31.05.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா முன்னிலை வகித்தார்.
நலத்திட்ட உதவிகள்
பின்பு துறை வாரியாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவர்கள் மூலமாக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் பேசும் பொழுது :
மக்கள் தொடர்பு திட்டமானது அரசின் திட்டங்கள் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு மக்களை தேடி கிராமங்களுக்கு சென்று இது போன்ற முகாம்களை அமைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இந்த முகாமின் நோக்கமாகும். தேன்கனிக்கோட்டை வட்டம் மலைகிராமங்கள் அதிகம் கொண்டுள்ள பகுதியாகும். முக்கியமாக இப்பகுதியில் உள்ள அனைத்து குழைந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக பெண்கல்விக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும். தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியை சேர்ந்த மாணவியர்களுக்கு கல்வி பயில முக்கியதுவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் நலத் துறையின் கிழ் இயங்கும் அரசு விடுதிகளில் தங்கி படிக்க முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தை திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஜவளகிரி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருதில் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த பகுதியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிகளவில் சாகுபடி உற்பத்தி விவசாயிகள் செய்து பயனடைய வேண்டும். அதேப்போல் தற்போது மண்பரிசோதனை வாகனம் மூலம் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மைகேற்ப இயற்கை உரங்கள் இட்டு விவசாயத்தை பெருக்கி கொள்ள வேண்டும். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துள்ள நிலையில் மழை நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்.
மழை காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிராமபுறங்களில் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே கடந்த மாதம் தேன்கனிக்கோட்டையில் துவக்கி வைக்கப்பட்ட நாட்டு மாட்டு பால் கொள்முதல் மையம் சிறப்பாக செயல்பட்டு 1 லிட்டர் பால் ரூ. 40 - க் கொள்முதல்செய்யப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கால் நடை வளர்ப்போர் நாட்டு இன பசுக்களை வளர்க்க வேண்டும். இந்த மலை பகுதிக்கு போதிய சாலை வசதி, போக்குவரத்து வசதி, பள்ளி கூடம், ஏற்படுத்தி தரப்படும். அரசாங்கத்தின் அனைத்து சலுகைள் பெறுவதற்கு அனைத்து திட்டங்களையும் ஆன்லைனில் பதிவு செய்து தங்களுடைய ஆதார் அட்டையையும் இணைத்து கொள்ள வேண்டும்.
வீட்டு மனைபட்டா
மேலும் இன்று மட்டும் ஜவளகிரி கிராமத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா 43, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை-76 , சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ்-5 நபர்களுக்கு தாதுஉப்பு கலவை, சமூக நலத்துறை சார்பில் 258 தாய்மார்களுக்கு தாலிக்க தங்கம், வேளாண்மைத்துறை சார்பில் 6 நபர்களுக்கு இடுப்பொருட்கள் மற்றும் துவரை நாற்றுகள், புதுவாழ்வு திட்டம் சார்பில் 19 பயனாளிகளுக்கு கடனுதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 3 நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி என ஆக மொத்தம் 463 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டுமென கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார். தொடர்ந்து ஜவளகிரி அரசு பள்ளியில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்பு திட்டம் வசந்தா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சங்கரன், கலெக்டர் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) பானுமதி,, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன்; தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் தேவிபிரியா, வன சரக அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சிவசங்கரன், கால்நடை துறை துணை இயக்குநர் மரு.சண்முகம், தோட்டகலை துறை உதவி இயக்குநர் வி.சிதம்பரம், தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) லட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் திருமால், வருவாய் ஆய்வாளர் மதன், சுரேந்தர், கிராம நிர்வாக அலுவலர் அருண், ஜவளகிரி சமூக சேவகர் முத்துராஜ், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், சந்தானம், கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ