எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கொச்சி முதல் திருப்புணித்துறா வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை நேற்று கொச்சி ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக ...
கேரளாவில் கொச்சியில் இருந்து திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் முதல் கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரையிலான 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் திட்டப்பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது. இதற்கான தொடக்க விழா கொச்சி ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது.
பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து நேற்று காலை கொச்சி வந்தார். பகல் 11 மணிக்கு தொடக்க விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர் வெங்கைய்யாநாயுடு, கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் மெட்ரோ ரெயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரெயிலில் பயணம்
மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரெயிலில் பயணம் செய்தார். அவருடன், கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன், மத்திய அமைச்சர் வெங்கைய்யாநாயுடு, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன் ஆகியோரும் சென்றனர். பின்னர் அதே ரெயிலில் அவர்கள் ஆலுவா திரும்பினார்.
பிரதமர் பாராட்டு
ரெயிலில் பயணம் செய்த போது, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மெட்ரோ ரெயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டினார். மகத்தான சாதனையை செய்து முடித்து விட்டீர்கள் என்று கூறி வாழ்த்தினார். மெட்ரோ ரெயிலின் தொடக்க விழா நேற்று நடந்தாலும் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியில் திருநங்கைகள் ...
மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் முதல் முறையாக திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்க, துப்புரவு பணி செய்ய என முதல் கட்டமாக 23 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் ஓடும்போது 60 திருநங்கைகள் பணியில் இருப்பார்கள் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாண்டிக்கு அழைப்பு இல்லை
கொச்சி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடக்க விழா உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இப்பணியினை முடிக்க உம்மன்சாண்டி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இப்போது முதல் கட்ட பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நடக்கும் நிலையில், விழாவில் பங்கேற்க உம்மன்சாண்டிக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
வருத்தம் இல்லை
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைக்காததில் எனக்கு வருத்தம் இல்லை. கேரளா மக்கள் நினைத்தால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியும் என்பதற்கு கொச்சி மெட்ரோ ரெயில் திட்டமே உதாரணமாகும். இன்று (நேற்று)நான் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். எனவே இன்னொரு நாளில் நான், மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக பயணம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேக் இன் இந்தியா திட்டம்
மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
“ மேக் இன் இந்தியா திட்டத்தை ரயில் பெட்டிகள் பிரதிபலிக்கிறது. சென்னை அருகே உள்ள தொழிற்சாலைகளில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய மூலப்பொருட்கள் 70 சதவீதத்தை கொண்டு ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சி நகரில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2021-ல் 23 லட்சமாக இங்கு மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர்புற உள்கட்டமைப்புகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைப்பதற்கு இது போன்ற விரைவான போக்குவரத்து அவசியம். கொச்சி பொருளாதார வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்களிக்கும். நகரத்தின் மொத்த பொது போக்குவரத்து அமைப்பை ஒரே சிஸ்டம் கீழ் கொச்சி மெட்ரோ ஒருங்கிணைக்கும்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.