எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, ஒராண்டுக்கு விலக்களிக்கும் அவசர சட்ட முன்வடிவை முதல்வர் எடப்பாடி உத்தரவுப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மசோதாக்கள் ...
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும்படி தமிழக சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்த இரண்டு மசோதாக்கள் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பலமுறை டில்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர், மத்திய மனிதவளத்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் என்று பலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ஒத்துழைக்க தயாராக ...
இந்த நிலையில் சென்னை தாம்பரம் மெப்ஸில் நடைபெற்ற தொழில் அதிபர்களுக்கான ஏற்றுமதி இறக்குமதி குறித்த கருத்தரங்கில் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பங்கேற்றார். அப்போது நீட் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என்று தெரியவந்திருக்கிறது. அதனால் நீட் தேர்வில் இருந்து ஒராண்டுக்கு மட்டும் விலக்களிக்கக்கூடிய வகையில் அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நிரந்தர விலக்கு என்பது சாத்தியமில்லை. மேலும் அரசு மருத்துவமனை கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து ஒராண்டுக்கு விலக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.
பிரதமருக்கு நன்றி
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை வரவேற்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். ஒராண்டுக்கு விலக்களிக்கும் இந்த திட்டம் தமிழக அரசுக்கு கிடைத்த முழுமையான வெற்றி என்றும், இதற்கான சட்டமுன்வடிவை தயாரித்து அளிப்பதற்காக அதிகாரிகள் டில்லி செல்ல இருப்பதாகவும், நாளை (இன்று) அவசர சட்டம் டில்லியில் சமர்பிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி, வரும் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் கவுன்சிலிங் முடிந்து மருத்துவக்கல்லூரியின் வகுப்புகள் திறக்கப்பட வேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முதல்வருடன் ஆலோசனை
முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று பிற்பகல் சென்னை கீரின்வேஸ் ரோட்டில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். அதில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
07 May 2024ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிக்ள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.