எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகிய விவசாயிகள் நலன் காக்கும், ஏழை எளிய மக்களின் பசிப் பிணியைப் போக்கிடும் திட்டங்களின் செயல்பாடு குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை மண்டல அலுவலகத்தில் நேற்று தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலர் டி.என் இராமநாதன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கா.பாலசந்திரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் முனைவர். தா. கார்த்திகேயன், அனைத்து மாவட்ட மண்டல மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உணவுத் துறை அமைச்சர் தனது உரையில், தமிழக முதல்வர் 6 நாட்கள் முன்னதாக 6.6.11 அன்றே மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டதன் பயனாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கீழ்க்காணும் விதத்தில் பலனடைந்துள்ளனர்.
முன்னதாகவே பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நடவு, சாகுபடி பணிகள் முன்னதாகவே நடைபெற்றன.
இந்த வருட மகசூல் இரட்டிப்பானதில் விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே அறுவடை பணிகள் நிறைவு பெற்றன. இருப்பினும், ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் 17 சதவீதம் முதல் 20 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பலனாக விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்று பயனடைந்தனர்.
அதிக மகசூல் தரக்கூடிய 9 வகை நெல் 1.13 லட்சம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ. 70ம் வழங்கி ரூ.24.32 கோடி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் இடைத்தரகர்கள், வியாபாரிகளை நாடிச் செல்லவில்லை.
ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் தற்போது இருபோக சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சாதனையாக நடப்பு குருவைப் பருவத்தில் 4.94 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 30.11.11க்குள் இக்கொள்முதல் 5 லட்சம் மெ.டன்னைக் கடந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறார்கள். கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மண்டல மேலாளர்களும் இனிவரும் காலங்களில் இப்பணி தொய்வின்றி சிறப்பாக அமைய அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பொது விநியோகத் திட்ட ஆய்வு குறித்துப்பேசிய அமைச்சர் மாதம் ஒன்றுக்கு 3.21 லட்சம் மெ.டன் விலையில்லா அரிசி தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. முல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புக் காவல் துறையினர் ஆகியோர் எடுத்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக ஜூன் 11 ம் மாதத்தில் 3.46 இலட்சம் மெ.டன்னாக இருந்த அரிசி நுகர்வு அக்டோபர் 11ல் 3.21 இலட்சம் மெ.டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும் 26.9.11 அன்று சேலம் மாவட்ட அரிசி விநியோக கிடங்கிலிருந்து 30 மெ.டன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவின்றியும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதுடன், போலி பட்டியல்கள் தயார் செய்தல், இத்திட்டத்திற்கென வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கடத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர்கள், போலி குடும்ப அட்டைகளைக் களைவதில் முனைப்புடன் செயல்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுகை இனங்களில் முன்னேற்றம் காணப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். இந்திய துணைக் கண்டத்திலேயே விலையில்லா அரிசி தந்து 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரே மாநிலம் ஜெயலலிதா ஆளுகின்ற தமிழகம் மட்டும்தான். எனவே இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் இயங்குகின்ற உணவுத்துறை சிறப்பாக செயல்பட அனைத்து அலுவலர்களும் அயராது பாடுபட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தகவல் பரிமாற்றத்திற்கென அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், ஆத்தூர், தண்டராம்பட்டு, குறிஞ்சிப்பாடி, திருவெறும்nullர், குத்தாலம், கடவூர், மடத்துக்குளம், ஆம்nullர் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கைபேசி, சிம்கார்டு ஆகியவை உணவுத்துறை அமைச்சர் காமராஜால் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.