எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்று சென்னையில் நேற்று காவலர் நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பணி நியமன ஆணை
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 46 காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையை சேர்ந்தவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்து தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி, தனது சிறந்த நிர்வாகத் திறமையால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டைமுதன்மை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா. `அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தின் வழிகாட்டுதலின்பேரில் அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
சிறப்பான முறையில்...
தமிழ்நாடு காவல்துறை தனிப்பெருமையோடு சிறப்பாக பணியாற்றி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும், தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இயற்கைப் பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
பணியிடம் நிரப்பு
சிறைத் துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர். இருப்பினும், காவலர் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இன்னும் சிறப்பான பாதுகாப்பை பொதுமக்களுக்கு கொடுக்க முடியும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள்.
காவலர்கள் தேர்வு
சீருடைப்பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா நவம்பர் மாதம் தொடங்கினார்கள். இது மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் இன்று வரை நம்மையெல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரெண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலைக்கூட்டத் தொடரில் நான், காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே பதினைந்தாயிரத்து அறுநூற்று இருபத்தொன்று (15,621) நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2-ம் நிலை காவலர்
இவற்றில், ஆயுதப்படைக்கு ஆறாயிரத்து நான்கு (6004) இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், இரண்டாயிரத்து ஐநூற்றுஅறுபத்தி நான்கு (2564) இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு நாலாயிரத்து ஐநூற்று அறுபத்தேழு (4567) இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், ஐந்து (5) பெண் காவலர்களும் என மொத்தம் பதிமூன்றாயிரத்து நூற்று நாற்பது (13,140) இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தேர்வு
மேலும் சிறைத்துறைக்கு தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கு (954) இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், முப்பத்தாறு (36) இரண்டாம் நிலைபெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து நானூற்று தொண்ணுற்று ஒன்று (1491) தீயணைப்பு வீரர்கள் எனமொத்தமாக பதினைந்தாயிரத்து அறுநூற்றி இருபத்தி ஒன்று (15,621) நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலமாக தமிழ்நாடு காவல் துறையில் காலி பணியிடங்களே இல்லை என்கிற உயரிய நிலையை உருவாக்கி தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பை இவ்வுலகே வியக்கும் வண்ணம் உயர்த்துவதே ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசின் நோக்கமாகும்.
பணியாற்ற வாய்ப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக 1992-ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பெண் காவலர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுஎன்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன. தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டியகடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும். இப்படிப்பட்ட சிறப்புமிகு தமிழ்நாடு காவல்துறையில் உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பெருமை அளிப்பதாகும்.
இதனை எந்நாளும் நினைவில் கொண்டுநீங்கள் உங்கள் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செவ்வனே செய்ய வேண்டும். சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டிவரும்.
உங்கள் சொந்த இல்லம்
``ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’’ என்ற எம்.ஜி.ஆர்.பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அம்மாவின் அரசு உங்கள் சொந்த இல்லம் ’’திட்டத்தின் கீழ் சீருடைப் பணியாளர்களுக்கென வீடுகள்கட்டிக் கொடுத்து வருகிறது. சென்னை வண்டலூருக்கு அருகில் மேலக்கோட்டையூரில் வீடுகள் கட்டிக் கொடுத்தது போல, கீழக்கோட்டையூரிலும் வீடுகள் கட்டிக் கொடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதே போல, பிற மாவட்டங்களிலும் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தன்னல மற்ற சேவை
பூவை பார்த்து ஒரு குழந்தை கேட்டது, உன்னை பறிக்கும் போது மலர்ந்த முகத்துடன் மணம் வீசுகிறாயே எப்படி என்று.... அதற்கு மலர் சொன்னது பறித்தவர் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்த்து எனது வலியெல்லாம் மறந்து போகிறது என்று..... காவல் பணியும் அதுபோல தான், நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னல மற்ற சேவை. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும்.
இன்று பணி நியமனம் பெற்றுள்ள உங்கள் கடமைக் கரங்கள் எதிர்காலத்தில் பதக்கங்கள் பலகுவிக்கும் திறமைக்கரங்களாக திகழ வேண்டும் என உளமாற வாழ்த்துகிறேன். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தி உங்களை எல்லாம் தேர்வு செய்த சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர், வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.