எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் அலுவலகங்களிலும், வளாகத்திலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, அப்புறப்படுத்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்புறப்படுத்தும் பணி
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் அங்குள்ள உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றினை அப்புறப்படுத்தும் பணியினை கலெக்டர் மேற்கொண்டார். இப்பணிகள் வாரந்தோறும் வியாழக்கிழமை மேற்கொள்ளவேண்டும்.அதன்பேரில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் சேமிக்கும் தொட்டியினை கலெக்டர் பார்வையிட்டு அவ்வப்போது தண்ணிர் தொட்டியினை சுத்தம் செய்து அலுவலக பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனவும், மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பதிவறையினை பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆண்டுகள் குறிப்பிட்டு சரியான முறையில் அடிக்கிவைத்து பராமரிக்கவேண்டும் எனவும் பதிவறை எழுத்தருக்கு அறிவுரை வழங்கினார். அலுவலக வளாகத்தில் உள்ள உபயோகமற்ற பொருட்களான விளம்பரப்பலகைகள், டயர்கள், டீ.கட்புகள், வாட்டர் பாட்டில்கள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றினை உடடினயாக அப்புறப்படுத்துவதால் ஏடிஸ் கொசுப்புழு உருவாகாமல் தடுப்பதோடு டெங்கு காய்ச்சல் பரவாமலும் தடுக்கலாம் என தெரிவித்தார்.மேலும், இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுவலர் தலைமையில் இத்துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகள் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும் மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நல்ல நீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட இவ்வகை கொசுப்புழுக்கள் சேமித்து வைக்கப்படும் நீர் ஆதாரங்கள், தொட்டிகள், பயனற்ற டயர்கள், வீடுகளில் உபயோகமற்ற பயனற்ற நிலையில் வீசி எறியப்படும் தேவையற்ற பொருட்கள் ஆட்டுறல்கள், கப்புகள், உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து அதன் மூலம் கொசுப்புழுக்கள் உண்டாகி டெங்கு காய்ச்சலுக்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை டெங்கு கொசுப்புழு (லார்வா) ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரகம் முதல் கல்வி நிலையங்கள் மற்றும் ஊட்டச்சத்து மையங்கள் வரையிலான அனைத்து துறை சார் அலுவல வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீர் அப்புறப்படுத்துதல், தேவையற்ற கொசுப்புழு உற்பத்திக்கு சாதகமான பொருட்கள் ஆகியவற்றை அனைத்து அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்துதல் மற்றும் அழித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இப்பணிகள் அரசு அலுவலக வளாகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள், கட்டிடங்கள், தொழிலகங்கள் ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே போன்று அனைத்து கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் ஆகியவற்றிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து கல்வி நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாக சாதகமான அம்சங்கள், அதனை அழிக்கும் யுக்திகள் குறித்து கல்வி நிறுவன தலைவர்கள், தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் இறைவணக்கத்தின் போது பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும். தொடர்ந்து குடிநீர் ஆதாரங்கள் சுத்தம் செய்தல், நீர் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை கழுவி தூய்மை படுத்துதல், குளோரினேஷன் பணிகள் போன்றவையும் ஒட்டுமொத்த குழுப்பணிகளாக மேற்கொள்ளப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவயிhளர் (வேளாண்மை) கிருபாகரன், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலச்சந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்