எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவ, மாணவிகளுக்கும், திருச்சிராப்பள்ளி சாவித்திரி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 422 மாணவ, மாணவிகளுக்கும், மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 64 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று (17.11.2017) வழங்கினார்கள்.
அமைச்சர் பேச்சு
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் எம்.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டை கல்வி வளர்ச்சியில் தன்னிகரில்லாத முதல் மாநிலமாக்கிட வேண்டுமென்று உறுதிபூண்டு அந்த எண்ணத்தை எண்ணியவாறு நிறைவேற்றிட தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு வழங்கி எண்ணில்லடங்கா திட்டங்களை செயல்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்கள்.
அம்மா கொண்டுவந்த பல்வேறு மகத்தான திட்டங்களால் அன்று பள்ளி செல்லத் தயங்கிய குழந்தைகள் இன்று பள்ளிக்கூடம் செல்ல சிட்டாய் பறக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா பள்ளி மாணவர்களின் கல்விக்கு தேவையான பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, காலணி, மிதிவண்டி, பேருந்து பயண அடடை, நிலவரைபட புத்தகம், கிரையான்ஸ், வண்ணப் பென்சில், ஜியாமென்டிரி பாக்ஸ், புத்தகப்பை, சீருடை போன்ற அனைத்தும் விலையில்லாமல் வழங்கிட ஆணையிட்டு பள்ளி கல்வித்துறையில் மாபெரும் புரட்சி செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் மகுடமாக மாணவ, மாணவியரின் அறிவு விளக்கத்தைத் தூண்டிவிடும் வகையில், விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2011 முதல் இதுவரை 40 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. 2016-17ம் கல்வியாண்டில் மட்டும் 10,178 மாணவர்களுக்கும், 13577 மாணவிகளுக்கும் என மொத்தம் 23,755 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 40 கோடி மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஊக்கத்தொகை மேற்படிப்பு பயிலுவதற்கு மிகவும் உதவி கரமாக உள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க பள்ளிகள் முதலாக மேல்நிலைப்பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில் சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் பெற்று கல்லூரிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் இருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.
அமைச்சர் வளர்மதி
விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் வளர்மதி பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா காலத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் ஒரு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் தலைச்சிறந்த துறையாக பள்ளிக்கல்வி துறை செயல்படுகிறது. குழந்தைகளின் ஆரம்பக்கல்வி முதல் அவர்களின் உயர்கல்வி வரை அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் மீது அதிக அக்கறை கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நகர்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இன்று விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. இக்கணினியின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உள்ளங்கையில் வைத்து தங்கள் அறிவை பெருக்கி கொள்ளலாம். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமைசெயலகத்தில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை சந்தித்த போது விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பாராட்டினார்கள்.
எனவே மாணவச் செல்வங்கள் நன்றாக படித்து சிறந்த பொறியாளராக, மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, வரவேண்டும். நன்றாக படித்து பள்ளிக்கும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரபாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பத்மநாதன்,மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் டி.வைதேகி(கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர்.சுசிலா (சாவித்திரி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஜெயசிம்மன் (மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி), முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஐயப்பன், முஸ்தபா, மகாலெட்சுமி, மற்றும் வழக்கறிஞர் ராஜ்குமார், அருள்ஜோதி, பாலசுப்ரமணியன், கலீல்ரகுமான், அன்பழகன், சுரேஷ்குப்தா, கண்ணதாசன், வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.