எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,டிச.- 12 - லோக்பால் மசோதாவுக்கு கீழ் பிரதமர் மற்றும் சி.மற்றும் டி.பிரிவு அரசு ஊழியர்களை கொண்டு வர வேண்டும் என்ற அண்ணா ஹசாரேயின் கோரிக்கைக்கு ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. லோக்பால் வரைவு மசோதாவுக்கான விதிமுறைகளை பாராளுமன்ற குழு தயாரித்து முடிக்கும் நிலையில் உள்ளது. இதில் பிரதமர், கீழ்நிலை அரசு ஊழியர்கள் ஆகியோர்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் பாராளுமன்ற குழு தயாரித்துள்ள லோக்பால் மசோதா விதிமுறைகள் பலமில்லாததாக இருக்கிறது. லோக்பால் மசோதாவுக்கு கீழ் பிரதமரையும் கீழ்மட்ட அரசு ஊழியர்களையும் கொண்டுவர வேண்டும் என்று கோரி பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசாரே நேற்று மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுகையில் அண்ணா ஹசாரேயின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஒரு சில விஷயங்களில் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளும்படியும் அண்ணா ஹசாரேயின் குழுவினர்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர். கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், ஹசாரேயின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றிருக்கு ஆதரவு தெரிவித்தனர். வலது கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் பேசுகையில் அண்ணா குழுவினர் கூறும் கருத்துக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஊழல்காரர்கள் என்று முத்திரை குத்த வேண்டாம் என்று குழுவினர்களை கேட்டுக்கொண்டார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் லோக்பால் குறித்த விவாதத்தில் பாரதிய ஜனதா, இடது கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜூஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். பேசிய தலைவர்களில் பெரும்பாலானோர், லோக்பால் மசோதாவுக்கு கீழ் பிரதமர்,கீழ்நிலை அரசு ஊழியர்கள், சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை கொண்டு வர வேண்டும் என்ற ஹசாரேயின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மேல் கோர்ட்டுகளை லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் நடக்கும் ஊழலை தடுக்க தனி அமைப்பு உருவாக்கலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்தனர். அண்ணா குழுவினர் கூறிய அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று அந்த குழுவினர் கருதக்கூடாது. சில விஷயங்களில் அண்ணா குழுவினர் நீக்குப்போக்குடன் நடந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.உலகம் என்பது வெறும் 10 பேர்களை கொண்டது மட்டுமல்ல. இந்தியாவில் 120 கோடி பேர் உள்ளனர். அறிவாளிகளுக்கு பஞ்சம் இல்லை. மற்றவர்கள் கூறும் சில கருத்துக்களையும் ஹசாரே காது கொடுத்து கேட்டு அதை பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏ.பி. பரதன் பேசுகையில் மேலும் கூறினார். சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் பேசுகையில் இதே கருத்தை தெரிவித்தார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று யாதவ் குற்றஞ்சாட்டி பேசினார். பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி பேசுகையில், லோக்பால் மசோதா தொடர்பாக பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை பாராளுமன்ற குழு மதிக்கவில்லை என்றார். பலமான லோக்பால் மசோதா விஷயத்தில் பாரதிய ஜனதாவுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்றும் ஜெட்லி கூறினார். அரசில் உள்ள அனைவரும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று ஜெட்லி மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ