எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் ஆண்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்றுமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, முத்தலாக் தடை மசோதாவை தயாரித்தது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா என பெயரிடப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் அறிமுகம் செய்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு புகார்கள்...
கூச்சலுக்கு நடுவே ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, “இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று (நேற்று) நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு, தங்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 66 பெண்கள் புகார் செய்துள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து தாமதமாக எழுந்த காரணத்துக்காக கணவர் தன்னை விவாகரத்து செய்ததாக உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஒரு பெண் இன்று புகார் செய்துள்ளார்.
எனவே, பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் நீதி கிடைப்பதற்காகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும்” என்றார்.
சிறை தண்டனைக்கு எதிர்ப்பு
பின்னர் இந்த மசோதா உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஜேபிஎன் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அசாதுதீன் ஒவைசி (ஏஐஎம்ஐஎம்), பி.மஹதாப் (பிஜு ஜனதா தளம்), இ.டி.முகமது பஷீர் (அனைத்து இந்திய முஸ்லிம் லீக்) மற்றும் அன்வர் ராஜா (அதிமுக) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக பேசினர். குறிப்பாக, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இந்த மசோதா உள்ளதாகவும் இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். குறிப்பாக, சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்கக் கோரினர்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இவர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்காததால் இந்த மசோதா மீது பேச அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு தாக்கல் செய்யப்படும்போது இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மக்களவையில் அக்கட்சி அமைதி காத்தது.
மசோதா நிறைவேற்றம்
நீண்ட விவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா திருத்தம் எதுவும் இன்றி நிறைவேறியதாக மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா சட்டமானால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் செல்லுபடியாகும். இதன்படி வாய்வழியாகவோ, எழுத்து மூலமோ அல்லது இமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக முத்தலாக் கூறுவது சட்டவிரோதம் ஆகும்.
இந்த சட்டத்தை மீறுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். மேலும் முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவனிடம் தனக்கும் தனது குழந்தைக்கும் நிவாரணம் வழங்குமாறு கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ