எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். மேலும், அவர்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நான்கு நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில், தலைமை நீதிபதி என்பவர் மற்ற நீதிபதிகளில் முதன்மையானவர் மட்டுமே, அதற்கு மேலும் அல்ல, அதேசமயம் கீழும் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களை...
சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் நேற்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.,
கடிதம் எழுதினோம்
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வலியுறுத்தினோம் ...
நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும் எனக்கூறினர். இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம் எனக்கூறினர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
ஆங்கிலேயர் கால...
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த சில உத்தரவுகள், ஒட்டுமொத்தமாக நீதித்துறையின் செயல்பாட்டை பாதித்துள்ளது குறித்து எங்கள் கவலையை தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதியுள்ளோம். இது ஐகோர்ட்டுகள் மற்றும் தலைமை நீதிபதி அலுவலக செயல்பாடு நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறோம். கொல்கத்தா, மும்பை, சென்னையில் உள்ள ஐகோர்ட்டுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது முதலே சில நடைமுறைகளையும், மரபுகளையும் பின்பற்றி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடுகளால் இந்த நீதிமன்றங்களும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.
முதன்மையானவர் ...
வழக்குகளை பட்டியலிடுவது என்பது, அதன் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வது என்பதும், தேவை ஏற்படும்போது, அமர்வுகள், நீதிமன்றங்களையும் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வதும், அமர்வின் நீதிபதிகளை முடிவு செய்வதும், தலைமை நீதிபதியின் தனியுரிமை என்பது மரபாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. வழக்குகளை ஒதுக்கீடு செய்வது என்பது எந்த மேல் அதிகாரிகளின் சட்ட உரிமையாக அங்கீகரிக்கப்படாதபோதும், நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சட்டப்படி நீதிபதிகளில், தலைமை நீதிபதி முதன்மையானவர் ஆவர். ஆனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்களோ அல்லது உயர்வானவர்களோ இல்லை.
தர்மசங்கடத்தை...
வழக்குகளை பட்டியலிடும் நடைமுறை என்பது சரியான முறையிலும், உரிய நேரத்திலும் நடைபெற தலைமை நீதிபதி வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற மரபுகள், நீதிமன்றத்திற்கு கூடுதல் வலிமையை தருவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் வழக்கின் தன்மை, அதில் தொடர்பான விஷயங்ளை கருத்தில் கொண்டு வழக்குகள் பட்டியலிடப்படுவதும், அமர்வுகள் முடிவு செய்யப்படுவதும் இருக்க வேண்டும். ஆனால், இது சம்பந்தபட்ட நீதிபதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பது மிக முக்கியம்.
பதில் அளிக்கவில்லை...
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நான்கு பேர் நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஆர்.பி ருத்ரா தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாகவும், நீதிபதிகள் தேர்வு தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த பரிந்துரைகள் அடிப்படையிலும் நடைமுறைகளை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாதன அமர்வு பிறப்பித்த உத்தரவு, வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானதாகும். இதுதொடர்பாக நீங்களும் இடம் பெற்றுள்ள கொலிஜியத்துடன், அரசியல் சாசன அமர்வு கருத்துக்களை கேட்டறிந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் கேள்விக்கு, மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. கொலிஜியம் உருவாக்கும் தேர்வு நடைமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மறு பரிசீலனை...
நீதிபதி கர்ணன் தொடர்புடைய தீர்ப்பில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு சில யோசனைகளை தெரிவித்தது. நீதிபதிகள் தேர்வு மற்றும் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். தேர்வுக்கான வழிமுறைகளை உருவாக்கும்போது வெளிப்படை தன்மையுடனும், இருக்க வேண்டும்., அரசியல் சாசன அமர்வுடன் மட்டும் விவாதிக்கப்பட வேண்டிய விவரம் அல்ல. அதையும் தாண்டி முழு நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரங்கள் தெரிய வேண்டியது அவசியம்.
எனவே இந்த விவகாரம் 27.10.2017 தங்களுடைய உத்தரவினை தொடர்ந்து மத்திய அரசால் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீக உரிமையும் தங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அது அமையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வரா, ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
பிரதமர் ஆலோசனை
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.