எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, டிச.15- இந்தியாவை, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ் ஆண்டுவிட்டது. தற்போது காங்கிரஸ் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உள்ளது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. தமிழ்நாட்டில் அம்மாவின் தலைமையிலான பெரும்பான்மை பெற்ற அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பென்னிகுக் என்ற ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டதுதான் இந்த பெரியாறு அணை
இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. கடந்த 1.1.1886- ல் சென்னை ராஜதானிக்கும் (மாகாணத்திற்கும்) திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே பெரியாறு திட்டத்தின் கீழ் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி 158 அடி உயரத்திற்கு அணை கட்டப்பட்டு அதில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. 152 அடி தண்ணீர் தேக்கினால்தான் அதில் இருந்து 48 அடி தண்ணீரை தமிழ்நாட்டின் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும். எனவே ஆண்டுக்கு 9600 மில்லியன் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு பயன்பட்டு வந்தது. இந்த தண்ணீரை நம்பித்தான் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட உழவர் பெருமக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த மாவட்டங்களில் மக்களின் பிரதான குடிநீராகவும் பெரியாற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1973- ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து வெளிவந்த பத்திரிக்கை ஒன்றில் பெரியாறு அணை பலவீனம் அடைந்து இருப்பதாகவும், அதனால் ஆபத்து நேரிடலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இது அடிப்படையற்ற ஒரு பொய்ச் செய்தியே ஆகும். அப்போது மத்திய அரசின் வல்லுனர் குழு பார்வையிட்டு, அணை உறுதியாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சான்றளித்தது. அப்போது முதல் கேரள அரசு, அணை பலவீனம் அடைந்துள்ளதாக ஒரு திட்டமிட்ட பொய்ச் செய்தியை பரப்பி வந்ததால், 25.11.1979-ல் மத்திய நீர்ப்பாசனக் குழுமத்தின் தலைவர் முன்னிலையில் பெரியாறு அணையை மேலும் பலப்படுத்தலாம் என்றும், தற்காலிகமாக நீர்த்தேக்க அளவு 152 அடிக்குப்பதில் 136 அடியாக இருக்கலாம் என்றும் அணையை மூன்று கட்டமாக பலப்படுத்தலாம் என்றும் முதற்கட்ட பணிக்குப்பின் 136 அடியாகவும், இரண்டாம் கட்ட பணி முடிந்தபின்பு 142 அடியாகவும், மூன்றாம் கட்ட பணிக்குப்பின் 152 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. உள்நோக்கோடு கேரள அரசு அணை பலவீனம் அடைந்ததாக வெற்று வதந்தியைப் பரப்பி வந்த ஒரே காரணத்திற்காக பலநூறு கோடி ரூபாயை அணையைப் பலப்படுத்தும் வகைக்காக தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. விஞ்ஞான ரீதியாக அணை பாதுகாப்பாக உள்ளது என்பதையும், அதற்காக எந்தெந்த வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டின் முதல்வர் அம்மா, உரிய புள்ளி விபரங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். அணை பலவீனம் அடையவும் இல்லை. அது உடையும் வாய்ப்பும் இல்லை. பின் ஏன் அணை உடைந்துவிடும் அப்படி உடைந்துவிட்டால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து பீதியை கேரள மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது என்றால் அது சுயநல அரசியலுக்காகத்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 9.12.2011 ஆம் நாள் கேரள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள அரசு இதுவரை உள்நோக்கோடு வதந்திகளை பரப்பி வந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர் தருவோம், புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள் எனச் சொல்லி வந்த கேரள காங்கிரஸ் அரசு முந்தைய ஒப்பந்த சரத்துக்களை அப்படியே நிறைவேற்றுவோம் என ஏன் சொல்லவில்லை?
இதுநாள் வரை முல்லைப் பெரியாறு அணை பலவீனப்பட்டுள்ளதாக எந்த ஒரு வல்லுனர் குழுவும் சொல்லவில்லை. மாறாக அணை பலமாக உள்ளது என்றே தெரிவித்துள்ளன. கடந்த 27.2.2006 ஆம் நாள் உச்சநீதிமன்றம், பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுப் பிரச்சினை குறித்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் எஞ்சிய பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் முன்னர் வல்லுனர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என தமது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கிய பின் அந்தத் தீர்ப்பை அமுல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடும் நோக்கத்தில், கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தம்)சட்டம் 2006 ஐ கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது 18.3.2006 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறுவது ஆகாதா? இதைத் தொடர்ந்து வழக்கு தற்போது 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்விடம் நிலுவையில் இருந்துவருகிறது. 152 அடி தேக்கப்பட்டால்கூட 15 டி.எம்.சி. தண்ணீர்தான் நமக்குக் கிடைக்கும். தற்போது 136 அடி தேக்கப்படுவதால் 8 டி.எம்.சி. தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. நிலைமை இப்படி இருக்க, புதிய அணையின் நீர்மட்டமே 120 அடி என்றால் தமிழ்நாடு இதுகாறும் பெற்றுவந்த நீரில் 8 ல் 1 பங்குகூட கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்? அந்த மாவட்டங்கள் எல்லாம் பாலைவனமாக மாறிவிடாதா?
முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது தென் தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சனை. சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் மைய ஆட்சியில் இருந்த தேசிய கட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிற காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தப் பிரச்சனை குறித்து துளியும் கவலைகொள்ளவில்லை. பிரச்சனைக்குத் தீர்வுகாண பாகுபாடின்றி நடுநிலைக் கண்ணோட்டத்தோடு ஆக்கப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையயையும் எடுக்காதது ஏன்? நடுவண் அரசு நடுநிலையோடு இல்லாமல் கேரளாவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவது ஏன்? மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு, கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கமா? கேரளத்தில் தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஒரே ஒரு உறுப்பினர் பலத்துடன் இருப்பதால் அங்கு சமீபத்தில் நடைபெற உள்ள ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிட்டால் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் பலமும் சமமாகி அதன் பின்பு காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருப்பதால் அந்த அரசைக் காப்பாற்ற துடிக்கிறதா மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு?
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயக்கடமை மத்திய அமைச்சரவைக்கு (நிர்வாகத்திற்கு) உண்டு ஒருவேளை, அந்தத் தீர்ப்பு இன்றைய காலச்சுழ்நிலைக்கு ஏற்ப சமுதாய நலனுக்கு எதிராக இருப்பதாகத் தோன்றினால் அதற்கு மாற்றாக புதிய சட்ட திருத்தத்தை நிறைவேற்றித் தரக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. அப்படி நிறைவேற்றாத நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக்கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் அவமதிக்கப்படுவதற்கு மைய அரசு இடம் தரவே கூடாது. அப்படி எந்த மாநில சட்டமன்றமாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் அந்த அரசை நீக்கக்கூடிய அரசமைப்பு சட்டவிதி 356-ஐ மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்திக்காமல், காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கேரள காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே ஓரவஞ்சனையாக நடப்பது அநீதியிலும் அநீதி ஆகும். இது நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை எல்லாம் பறிகொடுக்க காரணமாக இருந்த கருணாநிதி, எதிலும் தாமதமாக முடிவு எடுக்கும் மத்திய அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் தாமதத்தை மேற்கொள்ளாமல், நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இலக்கிய வசனம் பேசி நாடகம் ஆடுவதில் வல்லவர் கருணாநிதி என்பதை இந்த நாடே நன்கறியும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், தி.மு.க. கூட்டணிக் கட்சியாக மைய அரசில் இடம்பெற்று இருப்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று தனக்குத்தானே கருதிக்கொண்டு, ஒரு மைய அரசுக்கும் தி.மு.க.வின் மைய அமைச்சர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல் இப்போது உண்ணாநோன்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் கருணாநிதி. உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசியல் தலைவர்தான் என்றால், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கக்கூடாது என்று மைய அரசை நடத்தும் காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்து இருக்க வேண்டாமா? கேரள அரசுக்கு சார்பாக காங்கிரஸ் அரசு நீடிப்பதற்காகவே தங்கள் அளவில் நாடகம் ஆடும் காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் கண்டித்து நீங்கள் தமிழ்நாட்டுக்கு பகையாக நடப்பதால், உங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்து இந்த தி.மு.க. வெளியேறுகிறது என்ற அறைகூவலை அல்லவா கருணாநிதி விடுத்திருக்க வேண்டும்!
அப்படி அறிவிக்கும் அரசியல் துணிவு கருணாநிதிக்கு உண்டா? தமிழ் இனத்துக்கு என்று ஒரு தனி ஈழ ஆட்சி நடைபெறதபடி சிங்கள சர்வாதிகாரி ராஜபக்சேவுக்கு துணை போகிற காங்கிரஸ் ஆட்சியாளர்களை ஆதரித்தவர்தானே கருணாநிதி. அப்போதுகூட கடற்கரையில் மனைவியோடும், துணைவியோடும் ஏறத்தாழ சுமார் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாநோன்பு இருப்பதாக நாடகம் ஆடியவர்தானே இந்த கருணாநிதி
எனவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கிவரும் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க அரசியல் துணிவுடன் செயல்பட முன்வருமா? அல்லது கேரள காங்கிரஸ் ஓட்டு வங்கிக்காக இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்த வழிவகுக்குமா? இதுவே தமிழ்நாட்டு மக்களின் இன்றைய கேள்வி. மத்திய ஆட்சியாளர்களே பதில்சொல்லுங்கள்...
எஸ்.முத்துமணி
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.