முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்பவார் கட்சியுடன் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றதை எதிர்த்து அக்கட்சியை விட்டு மூத்த தலைவர் பி.ஏ.சங்மாவுடன் வெளியேறியவர் சரத்பவார். பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய இடம் வகித்து வருகிறார். இவரது கட்சி, மத்தியில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. மகராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பவார், பா.ஜ.க.வுடன் கூட்டணிப் பேச்சை தொடங்கினார். இதனால் பவாரை காங்கிரஸ் தனது கூட்டணியில் இருந்து விலக்கியது.

தற்போது மத்தியில் அரசியல் சூழல் மாறி வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி கள் ஒன்றுகூட முயன்று வருகின்றன. இதை முன்னின்று செயல்படுத்தும் முயற்சியில் சரத்பவார் இறங்கியுள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இத்துடன் காங்கிரசுடன் தனது கட்சி கூட்டணி வைக்கவும் பேசி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து