எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் வரும் மார்ச் 30-ம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணவிழா சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது.இதையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி அனைவரும் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் வரும் 30-ம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணவிழா வெகு சிறப்புடன் நடைபெறவுள்ளது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள இந்த திருமணவிழா கழக அம்மா பேரவை செயலாளரும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறுகிறது.தலைமைக் கழக நிர்வாகிகள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட கழகச் செயலாளர்கள், அனைத்து சார்புஅணி நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிடும் இந்த திருமணவிழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,கழக இணை ஒருங்கிணைப் பாளரும்,தமிழக முதலமைச்சருமான எடப்பாடி.கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு அம்மாவின் திருப்பெயரால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைப்பதுடன் 70வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்துகிறார்கள்.மேலும் திருமணவிழாவில் கலந்து கொள்ளும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது.
இதையடுத்து கழக அம்மா பேரவையின் சார்பில் நடைபெறவுள்ள இந்த திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை திருமங்கலம் தொகுதி பொதுமக்களுக்கு வழங்கிடும் நிகழ்ச்சி நேற்று காலை கள்ளிக்குடி ஒன்றியத்திலுள்ள செங்கப்படை கிராமத்தில் சிறப்புடன் தொடங்கியது.இதையொட்டி முதலாவதாக செங்கப்படையில் நடைபெற்ற அழைப்பிதழ் வழங்கும் நிகழச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 70ஜோடிகளுக்கான திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.இதனை தொடர்ந்து கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிசல்காளம்பட்டி,நேசநேரி,சிவரக்கோட்டை,அரசபட்டி,வீரப்பெருமாள்புரம்,வலையங்குளம்,தூம்பக்குளம்,கல்லணை,நெடுங்குளம்,உலகாணி,மேலஉப்பிலிக்குண்டு,கூடக்கோவில்,டி.கொக்குளம்,திருமால்,மருதங்குடி,எஸ்.வெள்ளாகுளம்,வேப்பங்குளம்,குராயூர்,பேய்க்குளம்,உன்னிபட்டி,ஆவல்சூரன்பட்டி,நல்லமநாயக்கன்பட்டி,மையிட்டான்பட்டி,கே.வெள்ளாகுளம்,தென்னமநல்லூர்,சித்தூர்,எம்.புளியங்குளம்,போத்தநதி,புதுப்பட்டி,வில்லூர்,அகத்தாபட்டி,ஓடைப்பட்டி,எஸ்.பி.நத்தம் என அனைத்து பகுதிகளிலும் கிராமம்,கிராமமாகச் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைப் பொருட்களுடன் நடைபெறவுள்ள திருமணவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கி திருமணவிழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.முன்னதாக அழைப்பிதழ் வழங்குவதற்காக கிராமங்களுக்கு வருகை புரிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஏராளமான பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் குலவையிட்டும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி, கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் உலகாணி.எம்.கே.மகாலிங்கம்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன்,ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் யூனியன் துணைச் சேர்மன்கள் பாவடியான்,கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்பிரபுசங்கர்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,கட்சி நிர்வாகிகள் வேல்ராமகிருஷ்ணன், வேல்பாண்டி,அழகர்,சரவணன்,முருகன்,ரவி,பத்மநாபன்,அன்னமுத்து,ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.