எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் முதல்வர் ஆவேசமாக பேசினார்.
விளக்க கூட்டம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஓராண்டு பூர்த்தியானதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சி...
முன்னதாக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் முதல்வர் பழனிசாமி சுற்றிப் பார்த்தார். அமைச்சர்களும் கண்காட்சியை சுற்றிப் பார்த்தனர். அதை தொடர்ந்து சாதனை மலரை முதல்வர் வெளியிட அதை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்களும் வரிசையாக சாதனை மலரை பெற்றுக் கொண்டனர். பின்னர் நடந்த விழா கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
ஒற்றுமையுடன்..
மக்கள் நலத்திட்டங்களால் ஜெயலலிதா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்பார் என்று பேசிய முதல்வர், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்றும், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் விரைவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் பெற்ற திட்டங்களையும் முதல்வர் பட்டியலிட்டு பேசினார். கட்சியில் படிப்படியாக வளர்ந்து முதலமைச்சராகி உள்ளேன் என்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அ.தி.மு.க அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக பேசினார். பின்னர் அவர் அரசின் திட்டங்களை குறிப்பிட்டார். அதன் விபரம் வருமாறு,
முதன்மை மாநிலமாக...
தமிழகம் முழுவதும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். 30 மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உழைக்கும் மகளிருக்காக இரு சக்கர வாகனத்தை வழங்கிய அரசு அ.தி.மு.க அரசுதான். மேலும் வறட்சிக்காக நிவாரணம் வழங்கி ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான். பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. ஓகி புயலின் போது காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. உயர் கல்வியில் தமிழகமே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான். இவ்வாறு தூர்வாரப்படுவதால் 15 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை அளித்ததும் அ.தி.மு.க. அரசுதான். அனைவருக்கும் வீடு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வலியுறுத்துவோம்...
நாங்கள் இதையெல்லாம் தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தவில்லை. காரணம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கொண்ட அம்மா வழியில் வந்தவர்கள் நாங்கள். அதனால்தான் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துகிறோம். மீனவர்கள் மீது தனி அக்கறை கொண்டது இந்த அரசு. இலங்கை சிறையில் மட்டுமல்ல, ஈரான் சிறையில் இருந்த மீனவர்களையும் விடுவித்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தமிழக அரசை விமர்சித்து சிலர் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்று நம்புகிறோம். ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்காக ரூ. 10 கோடி வழங்கியது அ.தி.மு.க. அரசுதான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார். அப்போது தடைகளை கடந்து சாதனை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று புகழாரம் சூட்டினார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 9 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை
16 May 2024சென்னை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்
16 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த 10 நாட்களில் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.